க்ரைம்

சென்னை: வீட்​டில் தனி​யாக இருந்த பெண்​ணிடம் போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கோடம்​பாக்​கம் விஸ்​வ​நாத​புரம், 3-வது குறுக்​குத் தெரு​வில் செல்வி (53) என்​பவர் வசித்து வரு​கிறார். இவரது மகன் சரண் டெல்​லி​யில் தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வருகிறார்.

கடந்த 23-ம் தேதி இரவு செல்வி வீட்​டில் தனி​யாக இருந்​த​போது, அங்கு வந்த 5 பேர் செல்​வி​யிடம், ``நாங்​கள் போலீஸ், உனது மகன் போதைப் பொருள் குற்​ற​வாளி​களின் தொடர்​பில் உள்​ளார். அவரை கைது செய்ய வந்​துள்​ளோம்'' என்​றனர். பின்னர், அந்த நபர்​கள் வீடு முழு​வதும் சோதனை​யிட்​டனர்.

மேலும் வீட்​டிலிருந்த தங்க நகையை எடுத்​துச் சென்​றனர். மேலும், இந்த வழக்​கி​லிருந்து உனது மகனை விடுவிக்க வேண்​டும் என்றால் ரூ.1 லட்​சம் தர வேண்​டும் என மிரட்டிவிட்டு அங்​கிருந்து சென்​றனர். பின்​னர், செல்​வியை போனில்தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்​ளனர். பயந்​து​போன செல்வி ரூ.70 ஆயிரம் கொடுத்​துள்​ளார்.

அதன் பின்​னரும், பணம் கேட்டு மிரட்​டிய​தால், இதுகுறித்​து, அவர் கோடம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், போலீஸ் எனக்​கூறி மிரட்டி பணம் பறித்​தது வில்​லி​வாக்​கம் ராஜாஜி நகரைச் சேர்ந்த பிர​வின் சுகு​மாறன் (43), அம்​பத்​தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த சக்​திவேல் (33) மற்​றும் அவர்​களது கூட்​டாளி​கள் என்​பது தெரிந்​தது.

மேலும், நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், பிர​வின் சுகு​மாறன் ஊர்க்காவல் படை​யில் பணி​யாற்றி வரு​வதும், தற்​போது வளசர​வாக்​கத்​தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்​டுந​ராக பணி​யாற்றி வருவதும் தெரிய வந்​துள்​ளது. இதையடுத்​து, பிர​வின் சுகு​மாரன், சக்​திவேல் ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர்களது கூட்​டாளி​களை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT