திருச்சி: திருச்சி கம்பரசம்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (39). ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றிய தவெக இணைச்செயலாளராக உள்ளார்.
இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் 2023-ல் கொடுத்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸில் இவர் மீது வழக்கு உள்ளது.
இந்நிலையில், அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.