க்ரைம்

டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கி ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த திருநங்கைகள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: டி​ராவல்ஸ் உரிமை​யாளரைத் தாக்கி ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த திருநங்​கைகள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். மது​ராந்​தகத்​தைச் சேர்ந்​தவர் ஜெகன் (30). டிராவல்ஸ் நிறு​வனம் வைத்து அவரே கார் ஓட்டி வருகிறார்.

அந்த வகையில், செங்​கல்​பட்டில் உள்ள கார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்​களை தினமும் அழைத்துச் சென்று வரு​கிறார். கடந்த 19-ம் தேதி இரவு வழக்​கம்​போல் செங்​கல்​பட்​டிலிருந்து ஊழியர்​களை அழைத்​துக் கொண்டு அம்​பத்​தூரில் இறக்​கி​விட்​டு, மீண்​டும் செங்​கல்​பட்டு செல்​வதற்​காக 20-ம் தேதி அதி​காலை 3 மணி​யள​வில் புறப்​பட்​டார்.

மதுர​வாயல் மேம்​பாலம் அருகே சென்​ற​போது தூக்​கம் வந்​த​தால் சிறிதுநேரம் காரை மதுர​வாயல் மேம்​பாலம் கீழே நிறுத்​தி​விட்டு காரிலேயே தூங்​கி​னார். அப்​போது அங்கு வந்த 2 திருநங்​கைகள் பணம் கேட்டு மிரட்​டினர். ஜெகன் பணமில்லை என தெரி​வித்​த​தால் அவரை சரமாரி​யாகத் தாக்​கினர்.

தொடர்ந்து பணம் தரவில்லை என்​றால் கார் கண்​ணாடியை உடைத்​து​விடு​வ​தாக மிரட்​டி, ஜெக​னின் செல்​போனை பறித்​து, ஜிபே மூலம் ரூ.11 ஆயிரம் பறித்​து​விட்டு தப்​பினர். அதிர்ச்​சி​யடைந்த ஜெகன், இதுதொடர்​பாக வானகரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து பணம் பறித்து தப்​பிய திருநங்​கைகளான பெரம்​பூரைச் சேர்ந்த கயல்​விழி (28), அதே பகு​தி​யைச் சேர்ந்த அனுஷிகா (19) ஆகிய இரு​வரையும் கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT