ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் 654 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்குரிய முறையில் பயணித்த ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமுக்குக் கொண்டு வந்தனர்.
படகில் இருந்த 478 கிலோ ஐஸ் போதைப் பொருள் மற்றும் 176 கிலோ போதைப்பொருளை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டன. படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும் 11 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.300 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, கடத்தலில் தொடர்புடைய நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இலங்கை கடற்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.