பவன் குமார்

 
க்ரைம்

சோமங்கலம் ஏடிஎம் கொள்ளை வழக்கு: துப்பாக்கியை காட்டி தப்பிய கும்பலில் ஒருவர் கைது

4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்திப்பிரிவு

தாம்பரம்: சோமங்​கலம் அருகே புதுப்​பேட்​டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் ரூ.9 லட்​சம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வழக்​கில், துப்​பாக்​கியைக் காட்டி போலீ​ஸாரிடம் இருந்து தப்​பிய கும்​பலைச் சேர்ந்த பவன் குமார் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மேலும் 4 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். தாம்​பரம் அடுத்த சோமங்​கலம் அருகே புதுப்​பேட்​டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்​மில் ஆகஸ்ட் 25-ம் தேதி அதி​காலை, காரில் வந்த கும்​பல், ஏடிஎம் மையத்​துக்​குள் புகுந்து கண்​காணிப்பு கேம​ராக்​களில் ரசாயனத்தை தெளித்​துள்​ளனர்.

பின்​னர் காஸ் வெல்​டிங் இயந்​திரம் மூலம் ஏடிஎம் இயந்​திரத்​தின் பணப்​பெட்​டியை உடைத்து ரூ.9 லட்​சத்தை கொள்​ளை​யடித்​து​விட்டு தப்​பினர்.

ஏடிஎம் கொள்ளை குறித்து மும்​பை​யில் உள்ள வங்​கி​யின் மத்​திய கட்​டுப்​பாட்டு அறையி​லிருந்து போலீ​ஸாருக்கு எச்​சரிக்கை தகவல் கிடைத்​தது. போலீ​ஸார் சம்பவ இடத்தை அடைவதற்​குள் கொள்​ளை​யர்​கள் தப்​பி​விட்​டனர்.

இதையடுத்து தனிப்​படை போலீ​ஸார் கொள்​ளை​யர்​களைத் தேடினர். அவர்​கள் பயன்​படுத்​திய கருப்பு நிற காரின் பதிவு எண்ணை மாற்​றி​யிருந்​தது தெரிய​வந்​தது. அந்த கார் தெலங்​கானா சென்​றதை கண்​டறிந்த போலீ​ஸார், சுங்​கச்​சாவடி​யில் தடுத்து நிறுத்த முயன்​றனர்.

அப்​போது கொள்​ளை​யர்​கள் துப்​பாக்​கியைக் காட்டி மிரட்​டி​விட்டு தப்​பினர். பின்​னர் வனப்​பகு​தி​யில்காரை விட்​டுச் சென்​றனர். கொள்​ளை​யர்​கள் ஹரி​யா​னா​வுக்​குத் தப்​பிச் சென்​ற​தாக தகவல் கிடைத்​ததையடுத்து தனிப்​படை அங்கு விரைந்​தது.

இந்​நிலை​யில் பவன் குமார் ஜெய்ப்​பூர் வைஷாலி நகர் போலீ​ஸா​ரால் வேறு வழக்​கில் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், மேலும் 4 பேர் கொள்​ளை​யில் ஈடு​பட்​டது உறு​தி​யான​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மேலும் விசா​ரணை​யில், திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் நடை​பெற்ற ஏடிஎம் கொள்ளை உட்பட 3 கொள்ளை சம்​பவங்​களில் கும்​பல் ஈடு​பட்​ட​தாக தெரிய​வந்​துள்​ளது. மேலும் வேலூர் உள்​ளிட்ட 2 இடங்​களில் கொள்​ளைக்கு முயன்​ற​தாக​வும் பவன் குமார் தெரி​வித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

ராஜஸ்​தானின் மேவாட் பகு​தி​யைச் சேர்ந்த கொள்​ளைக் கும்​பலுடன் இவர்​களுக்கு தொடர்பு இருப்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ள​தாக போலீ​ஸார் கூறுகின்​றனர். இந்த கும்​பல் மீது தமிழகத்​தில் சுமார் 55 வழக்​கு​கள் இருப்​ப​தாக​வும், பல்​வேறு மாநிலங்​களி​லும் கொள்ளை சம்​பவங்​களில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதற்​கிடையே, சோமங்​கலம் கொள்​ளை​யில் முதலில் கன்​டெய்​னர் லாரியை பயன்​படுத்​திய கும்​பல், பின்​னர் அதை ஓரிடத்​தில் நிறுத்​தி​விட்டு தெலங்​கானா பதிவு எண் கொண்ட காரில் தப்​பிச் சென்​றது தெரிய​வந்​துள்​ளது.

கும்​மிடிப்​பூண்டி ஏடிஎம் கொள்​ளை​யில் பயன்​படுத்​தப்​பட்​ட​தாக சந்​தேகிக்​கப்​படும் கன்​டெய்​னர் லாரி, பெரும்​புதூர் அருகே வடகால் பகு​தி​யில் சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. பவன் குமாரை சோமங்​கலம் போலீ​ஸார் காவலில் எடுத்​து வி​சா​ரிக்​க பிடி​வாரன்ட்​ நடவடிக்​கை மேற்​கொண்​டு வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT