க்ரைம்

கடனாக கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பிக் கேட்டதால் பழ வியாபாரியை கொலை செய்த பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: கடனாகக் கொடுத்த ரூ.10 லட்​சத்தை திருப்பி கேட்​ட​தால், பழ வியா​பாரியை கொலை செய்த இளம்​ பெண் உள்​ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்​து, சென்னை மாவட்ட கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்​னை, பெரியமேடு பகு​தி​யைச் சேர்ந்த பழ வியா​பாரி வேலு. இவரிடம், பம்​மலைச் சேர்ந்த கலா என்​பவர் ரூ. 10 லட்​சத்தை கடனாக வாங்​கி​யுள்​ளார். ஆனால், வாங்​கிய கடன் தொகையை திருப்பி கொடுக்​காமல் கலா இழுத்​தடித்து வந்​துள்​ளார்.

இதில், இரு​வருக்​குமிடையே தகராறு ஏற்​பட்ட நிலை​யில், கடந்த 2013 மே 29 அன்று தனது கடைக்கு வந்த கலா​விடம், கடனை திருப்​பித் தரும்​படி கோரி​யுள்​ளார். இதில் வாக்​கு​வாதம் முற்​றிய நிலை​யில், சிறிது நேரத்​தில் அங்கு வந்த கலா​வின் ஆதர​வாளர்​கள் வேலுவை கத்​தி​யால் சரமாரி​யாககுத்​தி​யும், வெட்​டி​யும் கொலை செய்​தனர். இதில், சம்பவ இடத்​திலேயே வேலு இறந்​தார்.

இந்த சம்​பவம் தொடர்​பாக, பெரியமேடு போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​து, பம்​மல் கலா (43), அயனாவரம் வாணி (26), ஓட்​டேரி அருண் (25), சதீஷ் (29), ஜெய் (24), சாஸ்​திரி நகரைச் சேர்ந்த முகமது மசூத்(24), கொடுங்​கையூர் சந்​தோஷ் குமார் (24) ஆகியோரை கைது செய்து சிறை​யில் அடைத்தனர்.

இந்த வழக்​கு, சென்னை 19-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்​.​ராஜ்கு​மார் முன்​பாக நடந்து வந்​தது. போலீ​ஸார் தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்​.தன​சேகரன், குற்​றம்சாட்​டப்​பட்​ட​வர்​களுக்கு எதி​ரான குற்​றச்​சாட்டை நிரூபித்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி, சம்பவ இடத்​தில் வாணி இல்லை என்​ப​தால் அவரை வழக்​கில் இருந்து விடு​வித்​தும், கொடுத்த கடனை திருப்​பிக்​கேட்ட ஆத்​திரத்​தில் கலா​வின் தூண்​டு​தலின் பேரில் பழ வியா​பாரி வேலுவை கொலை செய்த அருண், சதீஷ், ஜெய், முகமது மசூத், சந்​தோஷ்கு​மார், கலா ஆகியோருக்கு ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ.2 ஆயிரம்​ அபராதம்​ வி​தித்​தும்​ தீர்ப்​பளித்​தார்​.

SCROLL FOR NEXT