பிரதிநித்துவப்படம்

 
க்ரைம்

போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: சிங்​கப்​பூரைச் சேர்ந்த மூதாட்​டி​யின் சொத்​து​களை, போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்த, தஞ்​சாவூரைச் சேர்ந்த அதி​முக நிர்​வாகி உட்பட 12 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

சிங்​கப்​பூரைச் சேர்ந்​தவர் ஷேக் சிராஜுதீன். இவரது மனைவி முகமதா பேகம் (76). தொழில​திப​ரான ஷேக் சிராஜுதீனுக்கு தஞ்​சாவூர் நாஞ்​சிக்​கோட்​டை, சிராஜ்பூர் நகர், செங்​கிப்​பட்டி ஆகிய பகு​தி​களில் ஏராள​மான சொத்​துகள் உள்​ளன. 2015-ல் ஷேக் சிராஜுதீன் உயி​ரிழந்த நிலை​யில், அவரது சொத்​துகளை தஞ்​சாவூரைச் சேர்ந்த வித்யா சுமதி கவனித்து வந்​துள்​ளார்.

ஜெயலலிதா பேரவை தலைவர்: பின்​னர், வித்யா சுமதி தனக்கு அறி​முக​மான, தஞ்​சாவூரைச் சேர்ந்த அதி​முக ஜெயலலிதா பேரவை மத்​திய மாவட்​டத் தலை​வ​ரான கேபிள் செந்​தில் என்​கிற செந்​தில்​கு​மார் உள்​ளிட்​டோருடன் சேர்ந்து 2017 முதல் 2022 வரை போலி ஆவணங்​களை தயாரித்​து, முகமதா பேகத்​திடம் கையெழுத்து பெற்​றுள்​ளனர்.

போலி ஆவணங்கள்… தொடர்ந்​து, செங்​கிப்​பட்​டி, சிராஜ்பூர் பகு​தி​யில் உள்ள பெட்​ரோல் பங்க் இடத்தை செந்​தில்​கு​மார் தனது உறவின​ரான ரேவ​தி, மணி​கண்​டன், ஆதித்​யா, கவி​தா, சுஜாதா ஆகியோருக்கு விற்​பனை செய்​துள்​ளார்.

மேலும், சென்னை ஆழ்​வார்​பேட்​டை, தஞ்​சாவூர் நாஞ்​சிக்​கோட்டை ஆகிய பகு​தி​களில் சிராஜுதீனுக்கு சொந்​த​மான இடத்தை தான​மாக வழங்​கி​விட்​ட​தாக போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​துள்​ளனர். மூன்று வங்​கி​களில் முகமதா பேகம் பெயரில் கணக்​குத் தொடங்கி பரிவர்த்​தனை செய்​துள்​ளனர்.

அண்​மை​யில் சிராஜுதீன் வீட்டை உடைத்​து, அங்​கிருந்த ஆவணங்​கள், 4 இருசக்கர மற்​றும் 2 நான்கு சக்கர வாக​னங்​கள், தங்க நகைகள் ஆகிய​வற்றை திருடிய​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுகுறித்து செந்​தில்​கு​மார் உள்​ளிட்​டோரிடம் முகமதா பேகம் கேட்​ட​போது, அவருக்கு கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளனர்.

இதையடுத்​து, போலி ஆவணங்​கள் மூலம் ரூ.800 கோடி மதிப்​பிலான சொத்துகளை அபகரித்​து​விட்​ட​தாக தஞ்​சாவூர் குற்​றப் பிரிவு போலீ​ஸில் டிச. 27-ம் தேதி முகமதா பேகம் புகார் அளித்​தார்.

அதன்​பேரில், வித்யா சும​தி, செந்​தில்​கு​மார், பிர​காஷ், ரேவ​தி, பாஸ்​கரன், நாக​ராஜன், பெட்​ரிஷியா ஜோனி, செல்​லப்​பன், மணி​கண்​டன், ஆதித்​யா, கவி​தா, சுஜாதா ஆகிய 12 பேர் மீது 9 பிரிவு​களில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT