க்ரைம்

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: பெண் காவலருக்கு தவறான மெசேஜ் அனுப்​பிய​தாக கூறப்​பட்ட காவல் ஆய்​வாளர் சஸ்பெண்ட் செய்​யப்பட்டார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகநேரி காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராக பணி​யாற்​றிய​வர் திலீபன். இவர், கடந்த இரு தினங்​களுக்கு முன்பு திருநெல்​வேலி மாவட்​டம் சேரன்​ம​காதேவி காவல் நிலை​யத்​துக்கு பணி​யிட மாறு​தல் செய்​யப்​பட்​டார். இன்​னும் அங்கு சென்று பணி​யில் சேர​வில்​லை.

இந்​நிலை​யில், ஆறு​முகநேரி காவல் நிலை​யத்​தில் பணி​யாற்றி தற்​போது, சிங்​கப்​பெண் பாது​காப்பு படைக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள பெண் காவலர் ஒரு​வருக்கு வாட்​ஸ்​அப் மூலம் ஆய்​வாளர் திலீபன் தவறான மெசேஜ் அனுப்​பிய​தாக​வும், இதனை தட்​டிக்​கேட்ட அந்த பெண் காவலரின் கணவருக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக​வும் சமூக வலை​தளங்​களில் தகவல் பரவியது.

இதுதொடர்​பாக துறைரீ​தியான விசா​ரணை நடத்த தூத்​துக்​குடி மாவட்ட எஸ்​.பி. அபிஷேக் குப்தா உத்​தர​விட்​டுள்​ளார். அந்த விசா​ரணை நடந்து வரு​கிறது. இந்​நிலை​யில், தன் மீதான புகாரை மறுத்து ஆய்​வாளர் திலீபன் ஒரு வீடியோவை சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். இதையடுத்​து, ஆய்​வாளர் திலீபனை தற்​காலிக பணிநீக்​கம் செய்​து, திருநெல்​வேலி சரக டிஐஜி தேஷ்​முக் சேகர் சஞ்​சய் நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT