உள்படம்: ஆதிகேசவன்

 
க்ரைம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி படுகொலை - நடந்தது என்ன?

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் புகுந்து ரவுடி ஒரு​வர் படுகொலை செய்​யப்​பட்டார். கொளத்​தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்​தவர் ஆதி என்ற ஆதி​கேசவன் (20). இவர் மீது கொலை, கொலை முயற்​சி, மிரட்​டல், அடிதடி உட்பட 9 வழக்​கு​கள் உள்​ளன.

சென்னை காவல் துறை​யின் ‘பி’ வகை ரவுடி​யான ஆதி, ராஜமங்​கலம் சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி​கள் பட்​டியலில் இருந்​தார். ஆதிக்​கும், ஆவடி ஏரிக்​கரைப் பகு​தி​யைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒரு​வருக்​கும் முறையற்ற உறவு இருந்​துள்​ளது.

இந்​நிலை​யில், அந்த பெண்​ணுக்கு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் கடந்த மாதம் 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்​தது. உடல் நலக்​குறை​வால் அக்​குழந்தை நேற்று முன்​தினம் இறந்​தது.

தகவலறிந்த ஆதி, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அன்​றிரவு வந்​து, துக்​கம் விசா​ரித்​தார். பின்​னர் அங்​கிருந்த தனது தோழி வில்​லி​வாக்​கத்தைச் சேர்ந்த சாரு​ம​தி​யுடன் (23) சேர்ந்​து, மது அருந்​தி​யதுடன், அங்​கேயே படுத்து உறங்​கி​னார்.

பிரசவ வார்​டின் எதிர்​புறம் உள்ள தாழ்​வாரப் பகு​தி​யில் படுத்​திருந்தநிலை​யில், நேற்று அதி​காலை 3.45 மணி​யள​வில் அங்கு 2 இருசக்கர வாக​னங்​களில் ஹெல்​மெட் அணிந்த 3 பேர் வந்​தனர். அவர்​கள் அரி​வாள் உள்​ளிட்ட ஆயுதங்​களால் தூங்​கிக் கொண்டிருந்த ஆதியை சரமாரி​யாக வெட்​டி​விட்டு தப்​பினர்.

மருத்​து​வ​மனை ஊழியர்​கள், உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​த ஆதியை அவசர சிகிச்​சைப் பிரிவுக்கு கொண்டு சென்​றனர். அங்கு பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவர் இறந்​து​விட்​ட​தாக தெரிவித்தனர்.

தகவலறிந்த கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். கொலை​யாளி​களை கைது செய்ய 9 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை கைப்​பற்​றி, ஆய்வு செய்​தனர்.

கொலை தொடர்​பாக சூர்​யா, அலி​பாய், கார்த்​திக் மற்​றும் ஆதி​யின் காதலி, தோழி சாரு​மதி ஆகியோரிடம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். ஆதி​யின் காதலி​யின் காதலன்​தான் சூர்யா எனவும் மற்ற இரு​வரும் சூர்​யா​வின் நண்​பர்​கள் எனவும் கூறப்​படு​கிறது.

தகாத உறவு விவ​காரத்​தில் ஆதிக்​கும், சூர்​யா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தால். கொலை நடந்​த​தா? அல்​லது 2022-ல் நடை​பெற்ற கொலைக்கு பழி தீர்க்​கப்​பட்​டா​ரா? என்பன உட்பட பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை நடை​பெறுகிறது.

கச்​சித​மான திட்​டம்: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் 21 காவலா​ளி​கள் உள்​ளனர். இதில் சம்​பவம் நடை​பெற்ற பிரசவ வார்டில் மட்​டும் 4 காவலா​ளி​கள் பணி​யில் இருந்​தனர். மருத்​து​வ​மனைக்கு அடுத்​தடுத்து ஆம்​புலன்​ஸ்​கள் வந்த வண்​ணம் இருக்​கும் என்​ப​தால் அவை விரைந்து செல்ல தேவை​யான பணி​களில் காவலா​ளி​கள் முக்​கி​யத்​து​வம் கொடுத்​தனர்.

நோயாளி​களு​டன் அவர்​களது உறவினர்​கள் ஏராள​மானவர்​கள் வருவார்​கள். அவர்​கள் உணவு, உடை உட்பட பல்​வேறு வகை​யான பொருட்​களை​யும் பைகளில் சுமந்து வரு​வார்​கள். இதனால் அதற்குள் என்ன இருக்​கும் என யாருக்​கும் தெரி​யாது.

அதை சோதனை​யிடு​வதும் எளி​தானது கிடை​யாது. இதைப் பயன்​படுத்​திக் கொண்ட கொலை​யாளி​கள் சர்வ சா​தா​ரண​மாக பைகளில் ஆயுதங்​களை உள்ளே எடுத்​துச் சென்​று, அனை​வரும் தூங்​கிக் கொண்​டிருந்​த நேரத்​தில்​ கொலை செய்​து​விட்​டு தயா​ராக வெளி​யே நிறுத்​தி​யிருந்​த வாக​னங்​களில்​ தப்பிச் சென்றுள்ளனர்.

போலீ​ஸார் மீது நடவடிக்கை: கொலை நடந்த இடத்​துக்கு சென்று ஆய்வு செய்த பின்​னர் கூடு​தல் காவல் ஆணை​யர் நரேந்​திரன் நாயர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ரவுடி ஆதி கொலை தொடர்​பாக 2 பேரை கைது செய்​துள்​ளோம். மேலும் 4 பேரிடம் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. 2022-ல் நடந்த கொலை வழக்கு தொடர்​பாக 2 ஆண்​டு​கள் சிறையி​லிருந்து 10 நாட்​களுக்கு முன்​பு​தான் ஆதி வெளியே வந்​துள்​ளார்.

ஆதி மீது கொலை வழக்​கு​கள் இருப்​ப​தால் பழிக்​குப் பழி​யாக இந்த கொலை நடந்​திருக்​கலாம் என முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரி​கிறது. கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் சம்​பவத்​தன்று 10 போலீ​ஸார் பணி​யில் இருந்​துள்​ளனர்.

அவர்​கள் துரித​மாக செயல்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் அவர்​கள் அவ்​வாறு செய்​ய​வில்​லை. எனவே அவர்​கள் மீது துறை ரீதியி​லான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றார்.

SCROLL FOR NEXT