க்ரைம்

அடையாறு ஆற்றில் குதித்த ரிசர்வ் வங்கி அதிகாரி: 2 நாட்களாக தேடும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கே.கே.நகர் காம​ராஜர் சாலை​யில் ரிசர்வ் வங்கி ஊழியர் குடி​யிருப்பில் மோகன்​கு​மார் (30) என்​பவர் வசித்து வந்​தார். திரு​மணம் ஆகாத இவர், சென்னை பாரி​முனை​யில் செயல்​பட்டு வரும் இந்​திய ரிசர்வ் வங்​கி​யில் மனிதவள உதவி அதி​காரி​யாக பணி​யாற்​றி​னார். இணை​யத்​தின் மூலம் முதலீடு செய்​யும் வர்த்​தகத்​தி​லும் ஈடு​பட்டு வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த ஏப்​ரல் மாதம் மோகன்​கு​மார் ஆன்​லைன் டிரேடிங்​கில் ரூ.60 லட்​சம் முதலீடு செய்​தார். இதில் ரூ.30 லட்​சம் வங்​கிக் கடனாக​வும், மேலும் ரூ.30 லட்​சம் கடனாக​வும் பெற்​றுள்ளார் ஆனால், முதலீடு செய்த முழு தொகை​யை​யும் இழந்​துள்ளார்.

இதனால், கடும் மனவேதனை​யில் இருந்​துள்ளார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கோட்​டூர்​புரம் பாலத்​தில் இருந்து அடையாறு ஆற்​றில் குதித்தார். இதைப் பார்த்த மக்​கள் அதிர்ச்சி அடைந்​து, போலீஸுக்கும் தீயணைப்பு படைக்​கும் தகவல் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, போலீ​ஸார், தீயணைப்பு வீரர்​கள் சம்பவ இடம் விரைந்து ராட்சத மின் விளக்கு உதவி​யுடன், ரப்​பர் படகில் தேடினர். நேற்று காலை முதல் இரவு வரை தேடு​தல் பணி நடை​பெற்​றது.

ஆனால், மோகன் குமாரை கண்​டு​பிடிக்க முடி​யில்​லை. தேடு​தல் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. மற்​றொரு​புறம் ஆன்​லைன் டிரேடிங் முதலீட்​டில் ஏற்​பட்ட பெரும் நஷ்டம் இந்த விபரீத முடிவுக்கு காரண​மா? அல்​லது வேறு ஏதேனும் பின்​னணி உள்​ள​தா? என்​பது குறித்து கோட்​டூர்​புரம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT