க்ரைம்

என்ஐடி பேராசிரியைக்கு ஆபாச மெயில் அனுப்பிய பேராசிரியர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்​டம் துவாக்​குடி​யில் உள்ள தேசிய தொழில்​நுட்​பக் கழகத்​தில் (என்​ஐடி) தயாரிப்பு பொறி​யியல்​(புரொடக் ஷன் இன்​ஜினியரிங்) துறை​யில் பேராசிரிய​ராக பணிபுரிபவர் ஜெரால்டு (51).

இவர் சக பேராசிரியை ஒரு​வரிடம் சகஜ​மாக பழகி வந்​துள்​ளார். பின்​னர், கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு அவருட​னான நட்பை அந்​தப் பேராசிரியை துண்​டித்​து​விட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் ஆத்​திரமடைந்த ஜெரால்​டு, அந்​தப் பேராசிரியைக்கு இ-மெ​யில் மூலம் ஆபாச செய்​தியை அனுப்பியுள்​ளார்.

இதை அந்​தப் பேராசிரியை கவனிக்​காமல் விட்டுவிட்​ட​தாக தெரி​கிறது. இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு பேராசிரியை​யின் கணவர் எதேச்​சை​யாக மனை​வி​யின் இ-மெ​யிலை திறந்து பார்த்​த​போது ஆபாச செய்​தியை கண்டு அதிர்ச்​சியடைந்​தார். சைபர் க்ரைம் போலீ​ஸில் பேராசிரியை புகார் கொடுத்​தார். காவல் ஆய்​வாளர் அம்​பிகா வழக்​குப் பதிவு செய்து பேராசிரியர் ஜெரால்டை நேற்று கைது செய்​தார்.

SCROLL FOR NEXT