கே.​ராஜன்

 
க்ரைம்

ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், சென்​னை​யில் அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு வயது 85. சென்னை அடை​யாறு திரு.​வி.க. பாலம் வழி​யாக நேற்று மாலை ஏராள​மான வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன.

மாலை 4.25 மணி அளவில், அந்த வழி​யாகச் சென்ற கார் ஒன்று அடை​யாறு பாலத்​தில் நின்​றது. வெள்ளை முழுக்கை சட்​டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதி​ய​வர் ஒரு​வர் காரில் இருந்து இறங்​கி​னார். திடீரென பாலத்​தின் கைப்​பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடை​யாறு ஆற்​றில் குதித்​தார்.

இதைக் கண்​டு, அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அதிர்ச்சி அடைந்​தனர். ஆற்​றில் தத்​தளித்​தவரை மீட்க முயன்​றனர். தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் கொடுத்​தனர்.

மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை​யில் இருந்து 2 வாக​னங்​களில் வந்த தீயணைப்பு படை வீரர்​கள், ரப்​பர் படகு மூலம் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒரு மணி நேரத்​துக்​குப் பிறகு, முதி​ய​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.

இதற்​கிடையே, அடை​யாறு போலீ​ஸாரும் விரைந்து வந்​தனர். ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டது பிரபல திரைப்​படத் தயாரிப்​பாளர் கே.​ராஜன் (85) என்​பது தெரிய​வந்​தது.

போலீ​ஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர். அவரது குடும்​பத்​தினருக்​கும் தகவல் கொடுத்​தனர். அடை​யாறு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தற்கொலை குறித்து போலீஸ் தரப்​பில் கூறிய​தாவது: தயாரிப்​பாளர் கே.​ராஜனுக்கு மனை​வி, 3 மகன், ஒரு மகள் உள்​ளனர். அவர்​கள் சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் வசிக்​கின்​றனர்.

அவர்​களு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக சமீப​கால​மாக ராஜன் மட்​டும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஓட்​டலில் அறை எடுத்து தங்கி இருந்​துள்​ளார்.

குடும்ப பிரச்​சினை​யா?

நேற்று காரில் வேளச்​சேரி சென்​று​விட்டு திரும்​பும் வழி​யில் அடை​யாறு திரு.​வி.க பாலம் வந்​ததும் காரை நிறுத்​து​மாறு ஓட்​டுநர் தனசேகரனிடம் கூறி​யுள்​ளார். ‘மெது​வாக காரில் செல்​லுங்​கள். சிறிது தூரம் காலாற நடந்து வரு​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

ஓட்​டுநர் காரை நிறுத்​தி​யதும், இறங்​கிச் சென்று ஆற்​றில் குதித்​துள்​ளார். தற்​கொலைக்கு காரணம் குடும்ப பிரச்​சினை​யா, கடன் தொல்​லையா என்று பல கோணங்​களில் விசா​ரணை நடந்து வரு​கிறது. இவ்​வாறு போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

கடந்த 1983-ல் சுரேஷ் நடித்து வெளி​யான ‘பிரம்​மச்​சா​ரி​கள்’ திரைப்​படம் மூலம் தயாரிப்​பாளர் ஆனவர் கே.​ராஜன். ‘டபுள்​ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்​காத நாளில்​லை’ உட்பட சில திரைப்​படங்​களை தயாரித்​துள்​ளார்.

‘நம்ம ஊரு மாரி​யம்​மா’, ‘உணர்ச்​சிகள்’ ஆகிய படங்​களை இயக்​கியுள்ள அவர், ‘மைக்​கேல்​ராஜ்’, ‘உளவுத்​துறை’, உட்பட பல படங்​களில் குணச்​சித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார்.

சென்​னை, செங்​கல்​பட்டு விநி​யோகஸ்​தர்​கள் சங்​கத் தலை​வர் உள்​ளிட்ட பதவி​களை வகித்​துள்​ளார். அவர் திடீரென தற்​கொலை செய்​து​கொண்​டது, திரைத்​துறை​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தியுள்​ளது.

தலைவர்கள் இரங்கல்

கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT