க்ரைம்

கார்​ ஓட்டுநரை சர்ஜிக்கல்​ கத்தியால்​ வெட்டிய தனியார்​ மருத்துவமனை இயக்குநர்​ கைது

செய்திப்பிரிவு

சென்​னை: அய​னாவரத்​தில்​ மது​போதை​யில்​ தக​ராறு செய்​த ​கார்​ ஓட்​டுநரை, சர்​ஜிகல்​ கத்​தி​யால்​ குத்​தி​ய தனி​யார்​ மருத்​து​வ​மனை இயக்​குநர்​ கை​து செய்​யப்​பட்​டார்​.

​திரு​முல்​லை​வா​யில்​ எம்​ஜிஆர்​ நகர்​ பகு​தி​யைச்​ சேர்​ந்​தவர்​ சத்​யா (32). இவர்​ அய​னாவரம்​ கே.ஹெச்​. ​சாலை​யில்​ உள்​ள ஒரு தனி​யார்​ மருத்​து​வ​மனை​யில்​ கடந்​த ​மாதம்​ 20-ம்​ தே​தி ​கார்​ ஓட்​டுந​ராகப்​ பணி​யில்​ சேர்​ந்​துள்​ளார்​.

அவர்​ அடிக்​கடி மது அருந்​தி​விட்​டு​ப்​ பணி​க்​கு வந்​த​தா​லும்​, சரி​யாக வேலைக்​கு வ​ராத​தா​லும்​, மருத்​து​வ​மனை இயக்​குநர்​ நவீன்​ கடந்​த 4-ம்​ தே​தி அவரைப்​ பணியி​லிருந்​து நீக்​கி​யுள்​ளார்​.

இந்​நிலை​யில்​, கடந்​த 24-ம்​ தே​தி ​மாலை மருத்​து​வ​மனைக்​கு மது ​போதை​யில்​ வந்​த சத்​யா, இயக்​குநர்​ நவீனிடம்​ பணம்​ கேட்​டு தக​ராறு செய்​துள்​ளார்​. அப்​போது சத்​யா​விடம்​ ரூ.4 ஆ​யிரத்​தை ​கொடு​த்​து​விட்​டு, மீ​திப்​ பணத்​தைக்​ ​காலை​யில்​ தரு​வ​தாகக்​ கூறி​யுள்​ளார்​.

பணத்​தைப்​ பெற்​றுக்​ ​கொண்​டு சென்​ற சத்​யா, மீண்​டும்​ மது அருந்​தி ​விட்​டு வந்​து, மருத்​து​வ​மனை ஊழியர்​களிட​மும்​ இயக்​குநரிட​மும்​ கடும்​ ​வாக்​கு​வாதத்​தில்​ ஈடு​பட்​ட​தாகக்​ கூறப்​படு​கிறது.

இத​னால்​ ஆத்​திரமடைந்​த இயக்​குநர்​ நவீன்​, அங்​கிருந்​த சர்ஜிக்கல்​ கத்​தி​யை எடு​த்​து சத்​யா​வின்​ தோள்​பட்​டை​யில்​ வெட்​டி​யதாக கூறப்படுகிறது​. இ​தில்​ ​காயமடைந்​த சத்​யா, மருத்​து​வ​மனை​யில்​ அனு​ம​தி​க்​கப்​பட்​டார்​.

தகவலறிந்​து சம்​பவ இடத்​துக்​கு வந்​த அய​னாவரம்​ ​காவல்​துறை​யினர்​ ​வி​சா​ரணை நடத்​தினர்​. இரு தரப்​பினரு​ம்​ அளித்​த பு​காரின்​ அடிப்​படை​யில்​, நவீன்​ மற்​றும்​ சத்​யா ஆகிய இரு​வர்​ மீது​ம்​ வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

அதைத்​தொடர்​ந்​து, மருத்​து​வ​மனை இயக்​குநர்​ நவீனை ​போலீ​ஸார்​ கை​து செய்​து ​வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​. சிகிச்​சைக்​குப்​ பின்​ ​கார்​ ஓட்​டுநர்​ சத்​யா​வை​யும்​ கை​து செய்​ய உள்​ள​தாகப்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT