க்ரைம்

தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை

மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: கும்​மிடிப்​பூண்​டி, சென்​னை-​கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை-சர்​வீஸ் சாலை​யில், ஆக்​சிஸ் வங்​கி​யின் ஏடிஎம் மையம் உள்​ளது. இதில் நேற்று காலை வாடிக்கை​யாளர் ஒரு​வர் வந்த போது, ஏடிஎம் இயந்​திரம் உடைக்​கப்​பட்டது தெரிய வந்​தது.

இதுகுறித்​து, தகவலறிந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார் மற்​றும் கைரேகை நிபுணர்​கள் சம்பவ இடம் விரைந்து ஆய்வு செய்​தனர்.

ஆய்​வில், மர்ம கும்​பல், ஏடிஎம் மையத்​தில் உள்ள சிசிடிவி மீது கருப்பு நிற பெயிண்ட் அடித்​து, காஸ் வெல்​டிங் மூலம் இயந்​திரத்தை உடைத்​து, பணத்தை கொள்​ளை​யடித்தது தெரிய வந்​தது.

வங்கி நிர்​வாகத்​தினர் நடத்​திய ஆய்​வில், ஏடிஎம் இயந்​திரத்​தில் இருந்த ரூ.11,95,800-யை கொள்​ளை​ போனது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அப்​பகுதி சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை ஆய்​வு செய்ததில், கொள்ளை நடந்த வங்கி ஏடிஎம் மையத்​திலிருந்​து, 10 மீட்​டர் தொலை​வில் உள்ள இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யின் ஏடிஎம் இயந்​திரத்தை உடைக்க முயன்​று முடி​யாத​தால், மர்ம கும்பல் தப்​பியோடியது தெரிய வந்​துள்​ளது.

கடந்த 25- ம் தேதி காஞ்​சிபுரம் சோமங்​கலம் அருகே புதுப்​பேடு கிராமத்​தில் ஐசிஐசிஐ வங்​கி​யின் ஏடிஎம் மையத்​தில், காஸ் வெல்​டிங் இயந்​திரம் மூலம் உடைத்​து, ரூ.9 லட்​சம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட நிலை​யில், அதே பாணி​யில் கும்​மிடிப்​பூண்​டி​யில் பணம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT