ராஜு

 
க்ரைம்

தாம்பரம் | கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: பயிற்சியாளர் மீது ‘போக்சோ’ வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

தாம்பரம்: மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக, கபடி பயிற்​சி​யாளர் ராஜு மீது போக்சோ பிரி​வில் வழக்​குப் பதிந்து தலைமறை​வாக உள்ள அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்​தவர் ராஜூ. அப்​பகு​தி​யில் உள்ள சிறுமிகளுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக கபடி பயிற்சி அளித்து வரு​கிறார். கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடை​பெற்ற ஜூனியர் கபடி போட்​டி​யில், இவரிடம் பயிற்சி பெற்ற வீராங்​கனை தங்​கப்​ப​தக்​கம் வென்​றதைத் தொடர்ந்​து, பயிற்​சி​யாளர் ராஜூ​வும் கவனம் பெற்​றார்.

அந்த வீராங்​க​னைக்கு பல்​வேறு தரப்​பினரும் பாராட்டு மற்​றும் பரிசுகளை வழங்​கியதுடன், பயிற்​சி​யாளர் ராஜூவுக்​கும் ஊக்​கத்​தொகை மற்​றும் பரிசுப் பொருட்​கள் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், ராஜூ​விடம் பயிற்சி பெற்று வரும் 17 வயது மாண​வி​யான வீராங்​க​னை, பயிற்​சி​யாளர் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக செம்​மஞ்​சேரி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​துள்​ளார்.

பாதிக்​கப்​பட்ட அந்த மாணவிதாய், தந்தை இல்​லாத​தால், தனது பாட்​டி​யின் ஆதர​வோடு படித்​துக்​கொண்டு கபடி பயிற்​சி​யிலும் ஈடு​பட்டு வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில்​தான், கடந்த 9-ம் தேதி முதல் 3 முறை தான் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தாக அந்த சிறுமி காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து பயிற்​சி​யாளர் ராஜூ மீது போக்சோ உள்பட 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​துள்​ளனர். இதையடுத்து, அவர் தலைமறை​வாகி உள்​ளார். போலீ​ஸார் அவரை தேடி வரு​கின்​றனர்.

இதுஒரு​புறம் இருக்க, ‘தன்​னுடன் அனுசரணை​யாக செல்​லும் வீராங்​க​னை​களுக்கு பயிற்​சி​யாளர் ராஜூ அணி​யில் சேர்த்​துக் கொள்​வ​தில் முன்​னுரிமை கொடுத்​த​தாக​வும், மறுக்​கும் வீராங்​க​னை​களை பயிற்​சி​யின்​போது மற்​றவர்​களின் முன்​னிலை​யில் அவம​தித்து பேசி​யும், தாக்​கி​யும் வந்​த​தாக​வும் குற்​றச்​சாட்டு முன்​வைக்​கப்​படு​கிறது. இந்த குற்​றச்​சாட்​டின் உண்​மை தன்​மை குறித்​தும்​ போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT