க்ரைம்

ஜப்தி செய்யப்பட இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்த உரிமையாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை:திருச்​சி​யைச் சேர்ந்​தவர் முகமது யூசுப் (36). தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்து வரும் இவர், சென்​னை​யில் குத்​தகைக்கு வீடு தேடி வந்​தார்.

அப்​போது ஆன்​லைன் செயலி மூலம் மடிப்​பாக்​கம் குபேரன் நகர் 10-வது தெரு​வில் வீடு குத்​தகைக்கு இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து வீட்டு உரிமை​யாளர் ரமேஷ்கு​மாரிடம் (49) பேசி, ரூ.15 லட்​சத்​துக்கு குத்​தகை ஒப்​பந்​தம் செய்​தார்.

பின்​னர் இணை​ய​வழி பணப்​பரி​மாற்​றம் மூலம் ரூ.14.50 லட்​சம் செலுத்​தி, கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் அந்த வீட்​டில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், அதே மாதம் 23-ம் தேதி வங்கி அதி​காரி​கள் வீட்​டுக்கு வந்​து, ரமேஷ்கு​மார் கடன் பெற்று அதை திருப்​பிச் செலுத்​தாத​தால், நீதி​மன்ற உத்​தர​வின்​படி வீட்டை ஜப்தி செய்ய உள்​ள​தாக தெரி​வித்​தனர். தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி அந்த வீடு சீல் வைக்​கப்​பட்​டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது யூசுப், குத்​தகை தொகையை திருப்​பித் தரு​மாறு ரமேஷ்கு​மாரிடம் கேட்​டார். அவர் ரூ.2 லட்​சம் மட்​டும் திருப்​பிக் கொடுத்​து​விட்​டு, மீத​முள்ள ரூ.12.50 லட்​சத்தை வழங்​காமல் ஏமாற்றி வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

வீடு கடனில் இருப்​பதும், நீதி​மன்ற உத்​தர​வின்​படி ஜப்தி செய்​யப்பட உள்​ளதும் ஏற்​கெனவே தெரிந்​திருந்​தும், தன்னை ஏமாற்​றும் நோக்​கில் வீட்டை குத்​தகைக்கு விட்டு பணம் பெற்​ற​தாக முகமது யூசுப் அளித்த புகாரின்​பேரில், கடந்த 11-ம் தேதி மடிப்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, கொளத்​தூர் ஆசிரியர் காலனி​யில் இருந்த வீட்டு உரிமை​யாளர் ரமேஷ் கு​மாரை நேற்​று முன்​தினம் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT