க்ரைம்

பெண் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 4 பேர் கைது

கமிஷன் தராததால் இடைத்தரகர் சிக்கவைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: ஆந்​திர தம்​ப​திக்கு பெண் குழந்​தையை ரூ.4 லட்​சத்​துக்கு விற்ற தாய் உள்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை கொருக்​குப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் பவித்ரா (19). இவரது கணவர் ‘குள்ள’ கணேஷ், குற்ற வழக்​கில் கைதாகி புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். ஏற்​கெனவே ஒரு குழந்தை உள்ள நிலை​யில், கணவர் சிறைசெல்​லும் முன் மீண்​டும் கர்ப்​ப​மான பவித்​ரா, வறுமையில் தவித்​துள்​ளார். இதை பயன்​படுத்​திக்

கொண்ட அயனாவரத்​தைச் சேர்ந்த ஆண்​டாள் (64), தனலட்​சுமி (26) ஆகிய இடைத்​தரகர்​கள், "குழந்தை இல்​லாத ஆந்​திரத் தம்​ப​திக்​குக் குழந்​தையைக் கொடுத்​தால் ரூ.4 லட்​சம் தரு​வார்​கள். பிரசவச் செல​வை​யும் அவர்​களே பார்த்​துக்​கொள்​வார்​கள்" என ஆசை​ காட்​டி​யுள்​ளனர்.

இதையடுத்து வில்​லி​வாக்​கத்​தில் உள்ள பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் வரவேற்​பாள​ராகப் பணிபுரி​யும் துர்கா (43) என்​பவரைச் சந்​தித்​து, இந்த விவ​காரத்தை ரகசி​ய​மாக முடிக்​கு​மாறு தெரி​வித்​துள்​ளனர். இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி பவித்​ரா​வுக்கு பெண் குழந்தை பிறந்​துள்​ளது. மறு​நாளே ஆந்​திரத் தம்​ப​தி​யிடம் குழந்​தையைக் கொடுத்​து​விட்டு ரூ.4 லட்​சத்​தை பெற்​றனர். இதில் வரவேற்​பாளர் துர்கா மற்​றும் ஆண்​டாளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கமிஷ​னாகத் கொடுக்​கப்​பட்​டது.

ஆனால், மற்​றொரு இடைத்​தரக​ரான தனலட்​சுமிக்கு கமிஷன் தராமல் பவித்ரா ஏமாற்​றிய​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் ஆத்​திரமடைந்த தனலட்​சுமி, குழந்தை விற்​பனை விவ​காரத்தை கசி​ய​விட, விஷ​யம் மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அதி​காரி​களின் கவனத்​துக்​குச் சென்​றது. இதையடுத்​து, சமூகப் பணி​யாளர் மலர்​விழி அளித்த புகாரின் பேரில், வில்​லி​வாக்​கம் போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கினர்.

முதல்​கட்​ட​மாக தாய் பவித்​ரா, இடைத்​தரகர்​கள் ஆண்​டாள், தனலட்​சுமி மற்​றும் வரவேற்​பாளர் துர்கா ஆகிய 4 பேரை​யும் கைது செய்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். ஆந்​தி​ரா​வுக்கு விரைந்த தனிப்​படை போலீ​ஸார், குழந்​தையைப் பத்​திர​மாக மீட்டு சென்​னைக்​குக் கொண்டு வந்​தனர்.

இந்த கும்​பல் இதற்கு முன்​பும் இது​போல குழந்​தைகளை விற்​பனை செய்​துள்​ள​தா? இதில் மருத்​து​வ​மனை நிர்​வாகத்​துக்​குத் தொடர்பு இருக்​கிற​தா? என்ற கோணத்​தில் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த விற்​பனை விவ​காரத்​தில் 2 மருத்​து​வர்​களுக்கு தொடர்பு உள்​ள​தாக​வும் தகவல் வெளி​யானது. இதுகுறித்​தும்​ போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT