க்ரைம்

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பயிற்சி மருத்துவர் கைது

செய்திப்பிரிவு

தஞ்​சாவூர்: தஞ்சை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சில நாட்​களுக்கு முன்பு சிகிச்​சைக்​காக சிறு​வன் ஒரு​வர் அனு​ம​திக்​கப்​பட்டு இருந்​தார். அவருக்கு துணை​யாக அவரது சகோதரி​யான 15 வயது சிறுமி மருத்​து​வ​மனை​யில் தங்​கி​யிருந்​தார்.

அப்​போது, பணி​யில் இருந்த பயிற்சி மருத்​து​வ​ரான சேலம் மாவட்​டம் தலை​வாசல் பகு​தியை சேர்ந்த கோபி​நாத்​(35), அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்​துள்​ளார். அதிர்ச்​சி​யடைந்த அந்த சிறுமி அலறிய​தால், கோபி​நாத் அங்​கிருந்து சென்று விட்​டார்.

இதுகுறித்து தனது பெற்​றோரிடம் சிறுமி தெரி​வித்​துள்​ளார். பின்​னர் தஞ்​சாவூர் அனைத்து மகளிர் போலீ​ஸில் புகார் செய்​யப்​பட்​டது. போலீ​ஸார் விசா​ரணை நடந்​தி,பயிற்சி மருத்​து​வர்​கோபி​நாத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, அவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர் அவர் புதுக்​கோட்டை சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

கடந்த ஆண்டு ஒரு செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக எழுந்த புகாரில் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட கோபி​நாத், நீதி​மன்​றம் மூலம் மீண்​டும் பணி​யில் சேர்ந்​தார். இந்​நிலை​யில், தற்​போது போக்சோ வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT