க்ரைம்

சிறுமிகளுக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் 6 சிறுவர்கள் கைது

செய்திப்பிரிவு

மதுரை / திருவண்ணாமலை: மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​திலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலும் 13 மற்றும் 14 வயது சிறுமிகளை கூட்​டுப் பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்​கிய​தாக 6 சிறு​வர்​கள் போக்சோ சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​மங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த 16 வயது சிறு​வனுக்​கும், 13 வயது சிறுமிக்​கும் ஏற்​கெனவே பழக்​கம் இருந்​துள்​ளது. திரு​மங்​கலத்​தில் நடந்த கோயில் திரு​விழாவையொட்​டி, குண்​டாற்​றங்​கரை​யில் பொருட்​காட்சி நடந்​தது. நேற்று முன்​தினம் இரவு பொருட்​காட்​சிக்கு சிறுமியை சிறு​வன் அழைத்​துச் சென்​றுள்​ளார். இவர்​களு​டன் சிறு​வனின் 3 நண்​பர்​களும் சென்​றுள்​ளனர். பொருட்​காட்​சி​யைச் சுற்​றிப்​பார்த்த அவர்​கள், அரு​கிலுள்ள காட்​டுப் பகு​திக்​குச் சென்​றுள்​ளனர். அங்கு அந்​தச் சிறுமியை அவர்​கள் கூட்​டுப் பாலியல் துன்​புறுத்​தல் செய்​த​தாக சிறுமி தனது தாயிடம் கூறி​யுள்​ளார்.

இதைத் தொடர்ந்​து, சிறுமி​யின் பெற்​றோர் திரு​மங்​கலம் நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​பேரில், சிறுமி​யின் நண்​பர் உட்பட 16 வயது சிறார்​கள் 4 பேர் மீது போக்சோ பிரி​வின் கீழ் வழக்​குப் பதிந்து போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர். மேலும், அந்​தச் சிறுமி பாலியல் பலாத்​காரம் செய்​யப்​பட்​டது உண்மைதானா என்​பது குறித்து அந்த சிறுமியை மருத்​து​வப் பரிசோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக திருமங்கலம் போலீ​ஸார் தெரி​வித்​துள்ளனர்​.

இதேபோல், திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செங்​கம் அருகே உள்ள ஒரு கிராமத்​திலும் சிறுமி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவறான புகைப்படம்: இந்த கிராமத்தைச் சேர்ந்​த14 வயது சிறுமி. அதே பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறு​வன் காதலித்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிறு​வன் காதலித்து வந்த சிறுமி​யுடன் இணைந்து இருப்​பது போன்று தவறான ஒரு புகைப்​படத்​தைத் தனது 15 வயது நண்​பனுக்கு அனுப்​பி​வைத்​துள்​ளார்.

பின்​னர், அந்த படத்​தைச் சிறுமி​யிடம் காண்​பித்த இரு​வரும் சிறுமியை மிரட்​டிக் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்து வந்​துள்​ளனர். இதனால் பாதிக்​கப்​பட்ட சிறுமி ஒரு கட்​டத்​தில் இவர்​களது பாலியல் வன்​கொடுமை தாங்க முடி​யாமல் இதுகுறித்து தனது பெற்​றோரிடம் தெரி​வித்​துள்​ளார்.

பின்​னர் சிறுமி​யின் பெற்​றோர் இதுகுறித்து செங்​கம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் புகார் அளித்​தனர். அதன்​பேரில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், சிறுமியை மிரட்டி சிறு​வர்​கள் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​திருப்​பது உறு​தி​யானது. இதையடுத்து போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, சிறுமியைக் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்த சிறு​வர்​கள் இரு​வரை​யும் கடலூர் சிறார் கூர்நோக்கு இல்​லத்​தில்​ அடைத்​தனர்​.

SCROLL FOR NEXT