கோப்புப் படம்

 
க்ரைம்

டிக்கெட் பரிசோதகர்கள் சோதித்தபோது மின்சார ரயிலில் இருந்து குதித்த நபர்

செய்திப்பிரிவு

பொன்னேரி: மீஞ்​சூர் அருகே மின்​சார ரயி​லில் டிக்கெட் பரிசோதகர்​களின் பரிசோதனை​யின் போது, ரயி​லில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

சென்​னை- கும்​மிடிப்​பூண்டி ரயில்வே மார்க்​கத்​தில் நேற்று காலை சென்​னையி​லிருந்​து, கும்​மிடிப்​பூண்டி நோக்கி மின்​சார ரயில் சென்று கொண்​டிருந்தது. அந்த ரயில், திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே நந்​தி​யம்​பாக்​கம் ரயில் நிலை​யத்​தில் நின்ற போது, தனேஷ்கு​மார், ஹேமந்த்​,கணேஷ் ஆகியோர் அடங்​கிய டிக்கெட் பரிசோதகர்​கள் குழு​வினர் ஏறினர்.

          

ரயி​லின் முதல் வகுப்​புப் பெட்​டி​யில் ஒரு டிக்கெட் பரிசோதகர், பயணச்​சீட்​டுச் சரி​பார்ப்​பில் ஈடு​பட்​டிருந்​த​போது, உரிய பயணச்​சீட்டு இல்​லாமல் ஒரு நபர் பயணம் செய்​தது தெரிய வந்​தது. அவரிடம் டிக்கெட் பரிசோதகர், அபராதத் தொகையை வசூலிக்க முயன்​ற​போது, அவர் அபராதம் செலுத்த மறுத்​த​தால், இரு​வருக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டது.

இந்​நிலை​யில், ரயில் அத்​திப்​பட்டு ரயில் நிலை​யத்தை அடைந்​தபோது, அந்த நபர் ரயி​லில் இருந்து குதித்து காயமடைந்​தார். இதுகுறித்​து, தகவலறிந்த எண்​ணூர் ரயில்வே பாது​காப்பு படை​யினர், சம்​பந்​தப்​பட்ட நபரை மீட்​டு, சிகிச்​சைக்​காக 108 ஆம்​புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

மேலும், அத்​திப்​பட்டு ரயில் நிலைய நடைமேடை​யில் இருந்த சில பயணி​கள், டிக்கெட் பரிசோதகர்​கள்​தான் அந்த நபரை ரயி​லில் இருந்து தள்​ளி​விட்​ட​தாகத் தவறாக எண்​ணி, அவர்​களைத் தாக்க முயன்​றனர்.

பணி​யில் இருந்த எண்​ணூர் ரயில்வே பாது​காப்பு படை காவலர் ரவி, உடனடி​யாக டிக்கெட் பரிசோதகர்​களை முன்​ப​திவு அலு​வல​கத்​துக்​குள் பாது​காப்​பாக அழைத்​துச் சென்​றார். அதைத் தொடர்ந்​து, 10 பயணி​கள் முன்​ப​திவு அலு​வல​கத்​துக்​குள் நுழைந்து குழப்​பம் விளை​வித்​தனர். கொருக்​குப்​பேட்டை ரயில்வே போலீ​ஸார், ரயில்வே பாது​காப்பு படை போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT