வெங்​கடேசன்

 
க்ரைம்

10-வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தியவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: திரு​மங்​கலம், காம​ராஜ் நகரைச் சேர்ந்​தவர் ரவி(46). இவர் முதுகுத்​தண்டு வலி​யால் அவதிப்​பட்​டார். இதையடுத்​து, கடந்த ஆகஸ்ட் மாதம் அண்​ணாநகர், 2-வது பிர​தான சாலை ‘என்’ பிளாக்​கில் உள்ள எஸ்​.ஆர்​.எஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருத்​து​வ​மனைக்​குச் சென்று சிகிச்சை பெற்​றார்.

அங்​கிருந்த ஆயுர்வேத மருத்​து​வர் பெரம்​பூர் பட்​டேல் சாலை​யைச் சேர்ந்த வெங்​கடேசன்​(42), ரவிக்கு சில ஆங்கில மருந்​துகளை பரிந்​துரைத்துள்​ளார். அந்த மருந்தால் ரவிக்கு, முதுகு வலி சரி​யாக​வில்​லை. மாறாக வயிற்​றுப்​போக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் அவர் உண்​மை​யிலேயே மருத்​து​வம் படித்​துள்​ளா​ரா? என்ற சந்​தேகம் ரவிக்கு ஏற்பட்டது.

இதையடுத்​து, கடந்த செப்​டம்​பம் மாதம் இந்​திய மருத்​து​வக் கழக ஆணை​யத்​திடம் மருத்​து​வர் வெங்​கடேசன் மீது ரவி அடுத்​தடுத்து புகார் அளித்​தார். ஆனால், அதி​காரி​கள் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இதனால், அதிருப்தி அடைந்த ரவி, இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர உள்​ள​தாக வழக்​கறிஞர் மூலம் இந்​திய மருத்​து​வக் கழக ஆணை​யகத்​துக்கு நோட்​டீஸ் அனுப்​பி​னார்.

இதையடுத்​து, அறிஞர் அண்ணா சித்த மருத்​து​வ​மனை மருத்​து​வக் குழு​வினர், எஸ்​.ஆர்​.எஸ். ஆயுர்வேத மருத்​து​வ​மனைக்​குச் சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில், இந்த மருத்​து​வ​மனையை கடந்த 2 ஆண்​டு​களாக நடத்​தி வரும் வெங்​கடேசன் ஆயுர்வேத மருத்​து​வம் படிக்​காதது தெரிய​வந்​தது.

அதைத்​தொடர்ந்​து, இந்த விவ​காரம் தொடர்​பாக அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் மருத்​து​வம் மற்​றும் ஊரக சுகா​தார சேவை​கள் துறை அதி​காரி கண்​ணன் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து வெங்​கடேசனை நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

கைதான வெங்​கடேசன் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் ஆயுர்வேத மருத்​து​வ​மனை தொடங்​கி, மக்​களுக்கு மருத்​து​வம் பார்த்து வந்​தது உறுதி செய்​யப்​பட்​டது. அவரிடம் சிகிச்சை பெற்று வேறு யாரேனும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனரா என்​பது குறித்​தும் போலீ​ஸார்விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT