க்ரைம்

சேலம் அருகே கூடா நட்பால் விபரீதம்: பெண், அவரது மகனை கொன்ற ஆண் நண்பர் தற்கொலை

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அருகே பெண் தோழியை​யும் அவரது 10 வயது மகனை​யும் வெட்​டிக் கொலை செய்த ஆண் நண்​பர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சேலம் மாவட்​டம் ஓமலூர் அருகே பொட்​டியபுரம் கருத்​தானூரைச் சேர்ந்​தவர் ராஜ்கு​மார். இவரது மனைவி சத்யா (33). இவர்​களுக்கு மகன் கிஷாந்த் (10 மற்​றும் ஒரு மகள் உள்​ளனர்.

ராஜ்கு​மார் தற்​போது சத்​யாவை பிரிந்து வேறு ஒரு பெண்​ணுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்​தைகளு​டன் தனி​யாக வசித்து வந்த சத்​யா, ஓமலூரில் வீட்டு உபயோக பொருட்​கள் விற்​பனை செய்​யும் நிறு​வனத்​தில் வேலை பார்த்து வந்​தார்.

அந்​நிறு​வனத்​தில் மேலா​ள​ராக பணி​யாற்றி வந்த சேலம் ஜான்​சன் நகரைச் சேர்ந்த சக்​திவேல் (30) என்பவருடன் அவருக்கு பழக்​கம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சத்யா தலை​யில் வெட்​டுக்​காயத்துடன், ஒரு கை துண்​டான நிலை​யில் அரு​கில் இருந்த தந்​தை​யின் வீட்​டுக்கு ஓடி வந்​துள்​ளார்.

பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். சத்​யா​வின் வீட்​டுக்​குள் சென்று பார்த்​த​போது, சிறு​வன் கிஷாந்த் வெட்​டுக் காயங்​களு​டன் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தார்.

இதையடுத்து இரு​வரை​யும் சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் உறவினர்​கள் சேர்த்​தனர். கிஷாந்த் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​த நிலை​யில், சத்​யா​வும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இந்​தச் சம்​பவம் குறித்து ஓமலூர் போலீ​ஸார் கூறிய​தாவது: வெள்​ளக்​கல்​பட்​டி​யில் வசித்து வந்த சத்​திவேல் நேற்று முன்​தினம் இரவு சத்யா வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது அவர்​களுக்​குள் தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

அப்போது வீட்​டில் இருந்த அரி​வாளை எடுத்து சத்​யா, அவரது மகனை சரமாரி​யாக வெட்டி விட்டு தப்​பி​னார். சக்​திவேலை தேடிய​போது கருப்​பூர் கோரிமேடு பகு​தி​யில் அவர் மரத்​தில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டது தெரிய​வந்​தது.

தொடர்ந்து வி​சா​ரணை நடக்​கிறது. இவ்​வாறு தெரிவித்​தனர். இந்​தச் சம்​பவம் சேலத்​தில் பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

SCROLL FOR NEXT