க்ரைம்

தருமபுரி | விவசாயி கொலையில் 6 பேருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்​டம் நல்​லம் ​பள்ளி ஒன்​றி​யம் ஊத்​துப்​பள்ளம் சிவாடி காட்​டு​வளவு பிரிவு சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் சரவணன் (45). அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் முனு​சாமி.

இவர்​கள் இரு​வருக்​கும் விவ​சாய நிலம் தொடர்​பாக முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆக.4-ம் தேதி சரவணனை முனுசாமி, அவரது உறவினர்கள் நவீன், காமராஜ், விஜயன், முத்​து, மாதேஷ் ஆகியோர் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக தொப்​பூர் போலீ​ஸார் பதிவு செய்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. வழக்​கின் விசா​ரணை முடிவுற்ற நிலை​யில், குற்​றம் சாட்​டப்​பட்ட 6 பேருக்​கும் ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்​பளித்​தார்​.

SCROLL FOR NEXT