க்ரைம்

சர்வதேச கஞ்சா கடத்தலின் முக்கிய நபர் திருச்சியில் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்​தில் கஞ்சா கடத்​தல் வழக்​கில் தேடப்​பட்டு வந்த சர்​வ​தேச அளவில் முக்​கிய புள்​ளி​யான வேதா​ரண்​யத்தை சேர்ந்த ராம​தாஸ் என்​பவரை போதைப் பொருள் தடுப்பு பிரி​வினர் (என்​சிபி) திருச்சியில் கைது செய்​தனர்.

இதுகுறித்து என்​சிபி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ள​தாவது: 2020-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் நாகை மாவட்​டத்​தில் ஒரு லாரி​யில் கஞ்சா கடத்தி வரப்​படு​வ​தாக என்​சிபி பிரி​வினருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில், லாரியை வழிமறித்த என்​சிபி​யினர் அந்த லாரி​யில் இருந்து 661.5 கிலோ கஞ்​சாவை பறி​முதல் செய்​தனர்.

விசா​ரணை​யில், வேதா​ரண்​யத்தை சேர்ந்த சுப்​பிரமணி​யன் மகன் ராம​தாஸ் (என்​கிற) கருத்​த​பாண்டி கஞ்சா கடத்​தலில் ஈடு​பட்ட முக்​கிய நபர் என்​பதும், கஞ்​சாவை இலங்​கைக்கு கடத்தி செல்​வதை வழக்​க​மாக வைத்​திருந்​தார் என்​பதும் தெரிய​வந்​தது.

இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற குற்​ற​வாளி​கள் அனை​வரும் கைது செய்​யப்​பட்​டு, நீதி​மன்​றத்​தால் தண்​டிக்​கப்​பட்ட நிலை​யில் ராம​தாஸ் மட்​டும் தலைமறை​வாக இருந்து வந்​தார்.

இதனிடையே, போதைப்​பொருள் இல்​லாத இந்​தியா (நஷா முக்த் பாரத்) என்ற தொலைநோக்​குப் பார்​வை​யின்​படி, போதைப்​பொருள் குற்​ற​வாளி​கள் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வதை உறு​தி​செய்ய போதைப்​பொருள் கட்​டுப்​பாட்டு பணி​யகம் உறு​தி​யான முயற்​சிகளைத் தொடர்ந்து செய்து வரு​கிறது.

அந்த வகை​யில், நாகை​யில் கஞ்சா கடத்​தல் வழக்​கில் தேடப்​பட்டு வந்த ராம​தாஸ் (என்​கிற) கருத்​த​பாண்டி சிங்​கப்​பூரில் இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

சர்​வ​தேச ஒத்​துழைப்​புடன் அவரது நடமாட்​டம் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், ஏப்​.19-ம் தேதி அவர் திருச்சி விமான நிலை​யத்​தில் வந்​திறங்​கிய​போது என்​சிபி​யால் கைது செய்​யப்​பட்​டார். இவ்​வாறு தெரி​விக்கப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT