சென்னை: சினிமா காட்சிகளை அப்படியே நடித்து ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். இந்நிலையில், திவாகர் சில தினங்களுக்கு முன், கார்த்திக் என்ற நபர் போலீஸாருக்கு பணம் கொடுத்து தன் மீது வழக்குப் பதிவு செய்ய வைத்ததாக வீடியோவெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை நீக்கக்கோரி யூடியூப் சேனல் ஊழியர் கார்த்திக், திவாகரிடம் கேட்டுள்ளார். அப் போது, திவாகர் வீடியோவை நீக்க ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கார்த்திக் புகார் அளித்த நிலையில் பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ்ப்பாக்கம் போலீஸார் திவாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில், மதுரையில் இருந்த திவாகரை சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், எழும்பூர்
குற்றவியல் நீதிமன்றத்தில் திவாகரை போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை நீதிபதிகள் ஜாமீனில் விடுவித்தனர்.