க்ரைம்

ஆசிரியர்கள் அடித்ததாக புகார்: வால்பாறை அரசுப் பள்ளி மாணவி தற்கொலை

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: கோவை மாவட்​டம் வால்​பாறை​யில் அரசுப் பள்ளி மாணவி தீக்​குளித்து தற்​கொலை செய்து கொண்​டார். பள்ளி ஆசிரியர்​கள் அடித்​த​தால் அவர் தற்​கொலை செய்து கொண்​டதாகத் தெரி​கிறது. இதுகுறித்து போலீ​ஸார் மற்​றும் அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர்.

வால்​பாறை ரொட்​டிக்​கடை பாறைமேடு பகு​தி​யைச் சேர்ந்த மாண​வி, அங்​குள்ள அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் 9-ம் வகுப்பு படித்து வந்​தார். அவர் கடந்த மாதம் 10-ம் தேதி உடலில் மண்​ணெண்​ணெய் ஊற்​றி, தீ வைத்​துக் கொண்​டார்.

உடல் கரு​கிய நிலை​யில் கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டிருந்த அந்த மாணவி நேற்று முன்​தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். உயி​ரிழப்​ப​தற்கு சில தினங்​களுக்கு முன்பு மாணவி பெற்​றோரிடம் நடந்த சம்​பவம் குறித்து கூறியதை வீடியோ​வில் பதிவு செய்​துள்​ளனர்.

உருவ கேலி செய்தனர்... அதில், “பள்​ளி​யில் நன்​றாகப் படிக்​கும் மாணவி​கள், படிக்​காத மாணவி​கள் என பிரித்து அமரச் செய்​கின்​றனர். நான் சரி​யாகப் படிக்​க​வில்லை எனக் கூறி, படிக்​காத மாணவி​களு​டன் அமரச் செய்​தனர். மேலும், உருவ கேலி​யும் செய்​தனர்.

சரி​யாகப் படிக்​க​வில்லை என்று கூறி ஆசிரியர்​கள் என்னை அடித்​தனர். பெற்​றோரிடம் புகார் தெரி​வித்து விடு​வ​தாக கூறிய​தால், மனமுடைந்த நிலை​யில் வீட்​டுக்கு வந்து மண்​ணெண்​ணெய் ஊற்றி தீவைத்​துக் கொண்​டேன்” என்று மாணவி தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சம்​பந்​தப்​பட்ட பள்ளி ஆசிரியர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, மாண​வி​யின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள், மாண​வி​யின் சடலத்தை வாங்க மறுத்து கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும், கோவை மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளரிடம் மனு அளித்​தனர். உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அதி​காரி​கள் உறுதி அளித்​ததையடுத்து மாண​வி​யின் உடலைப் பெற்​றுக் கொண்​டனர்.

இதற்​கிடை​யில், மாவட்ட கல்வி அலு​வலர் மணி​மாலா, வால்​பாறை காவல் நிலைய ஆய்​வாளர் ராமச்​சந்​திரன் ஆகியோர் நேற்று மாணவி படித்து வந்த ரொட்​டிக்​கடை அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் விசா​ரணை மேற்​கொண்டனர்.

SCROLL FOR NEXT