நெல் ஈரப்பத தளர்வு விவகாரம்: மத்திய அரசு நிராகரிப்பால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஈரமாக இருந்த நெல்மணிகளை சாலையில் கொட்டி உலரவைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி. (கோப்பு படம்)

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஈரமாக இருந்த நெல்மணிகளை சாலையில் கொட்டி உலரவைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி. (கோப்பு படம்)

Updated on
1 min read

தஞ்சாவூா்: நெல் ஈரப்பத தளர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்​கையை மத்​திய அரசு நிராகரித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ள​தால் டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர். டெல்டா மாவட்​டங்​களில் 6.50 லட்​சம் ஏக்​கரில் குறுவை சாகுபடி நடை​பெற்​றது. சாகுபடி செய்​யப்​பட்ட நெல் கடந்த செப்​டம்​பர் மாதம் முதல் அறு​வடை செய்​யப்​பட்டு வந்​தது.

இதையடுத்​து, அக். 16-ம் தேதி முதல் வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கியது. ஆனால், அன்று முதல் டெல்டா மாவட்​டங்​களில் பரவலாக மழை பெய்​த​தால், நெல் அறு​வடைப் பணி வெகு​வாக பாதிக்​கப்​பட்​டது. இதனால் நெல்​லின் ஈரப்​ப​தம் அதி​கரித்து காணப்​பட்​டது.

எனவே, நெல்​லின் ஈரப்​பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்​டும் என மத்​திய, மாநில அரசுகளுக்கு விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​தனர். அதே​போல, மாநில அரசும் மத்​திய அரசுக்கு கடிதம் எழு​தி​யது. இதையடுத்​து, மத்​திய குழு​வினர் டெல்டா மாவட்​டங்​களில் நெல்​லின் ஈரப்​ப​தம் குறித்து கள ஆய்வு மேற்​கொண்​டனர்.

இந்​நிலையில், ஈரப்பத தளர்வை மத்​திய அரசு நிராகரித்து விட்​ட​தாக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். இதனால் டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர். இதுகுறித்து தமிழ்​நாடு காவிரி விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் எல்​.பழனியப்​பன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “நெல்​லின் ஈரப்பத தளர்வு குறித்து மத்​திய அரசு அறிவிக்​காதது பெரும் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது.

ஒவ்​வொரு முறை​யும் ஈரப்​ப​தம் தளர்வு கோரும்​போதெல்​லாம், மத்​திய குழு ஆய்​வுக்கு வரு​வது சம்​பிர​தாய​மாகவே உள்​ளது. அதற்​கான செல​வில், பல நெல் உலர் இயந்​திரங்​களை வாங்​கலாம்” என்று தெரிவித்துள்ளார். தமிழக விவ​சா​யிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர் ப.ஜெகதீசன் கூறும்​போது, “விவ​சா​யிகள் வேண்​டுமென்றே நெல்​லில் ஈரப்​ப​தத்தை அதி​கரிப்​ப​தில்​லை. இயற்கை காரணங்​களால் ஈரப்​ப​தம் அதி​கரிப்​ப​தால் விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

ஆனால், மத்​திய அரசு 17 சதவீதத்​துக்​கு மேல் அதி​கரிக்க வாய்ப்​பில்லை என்று தெரி​வித்​துள்​ளது. இது ஒட்​டுமொத்த விவ​சா​யிகளை​யும் ஏமாற்​றும் செய​லாகும்” என்​றார். தமிழக நலிவுற்ற விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் கே.எஸ்​.​முகமதுஇப்​ராஹிம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தமிழக அரசு நெல் கொள்​முதல் செய்​யும்​போது, ஈரப்​ப​தம் குறித்து முடி​வெடுக்​கும் முழு அதி​காரத்​தை​யும் தமிழக அரசுக்கே வழங்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்கமாநிலப் பொதுச் செய​லா​ளர் சாமி நடராஜன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மத்​திய அரசு அதி​காரி​கள் ஆய்வு நடத்​திய பல நாட்​களுக்​குப் பின்​னர் ஈரப்பத அளவை உயர்த்த மத்​திய அரசு மறுப்​புத் தெரி​வித்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது.

கோவை​யில் நடை​பெற்ற இயற்கை விவ​சா​யிகள் மாநாட்​டில் பிரதமர் மோடி பங்​கேற்ற நிலை​யில், நெல்​லின் ஈரப்​ப​தத்தை உயர்த்தி கொள்​முதல் செய்​வதற்கு அனு​மதி மறுத்​திருப்​பது தமிழக விவ​சா​யிகளுக்கு மத்​திய அரசு செய்​யும் துரோக​மாகும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in