க்ரைம்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தோழியின் தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தோழி​யின் வீட்​டுக்கு விளை​யாடச் சென்ற சிறுமிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த தோழி​யின் தந்​தைக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்​து, சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்​னை, வியாசர்​பாடி பகு​தி​யில் கணவரை இழந்த பெண் தனது இரு மகள்​களு​டன் வசித்து வரு​கிறார். பகல் நேரத்​தில் வேலைக்கு செல்​லும் அந்த பெண், தனது இரு மகள்​களை வீட்​டிலேயே தனி​யாக விட்டு விட்​டுச் செல்​வது வழக்​கம்.

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் அந்த பெண் வேலைக்கு சென்​ற​போது, 13 வயதாகும் மூத்த மகள் பக்​கத்து வீட்​டில் உள்ள தனது தோழி வீட்​டுக்கு விளை​யாடச் சென்​றுள்​ளார். அப்​போது அந்த வீட்​டில் இருந்த தோழியின் தந்தை அந்த சிறுமியை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக, அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்​கவே, எம்​கேபி நகர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ், அந்த நபரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ். பத்மா முன்​பாக நடந்​தது. அப்​போது, அரசு தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் எஸ்​.அனிதா ஆஜராகி குற்​றச்​சாட்டை நிரூபித்​தார்.

இதையடுத்​து, நீதிபதி குற்​றம் சாட்​டப்​பட்ட தோழி​யின் தந்​தைக்கு 20 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தார். அதே​போல, பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4.1 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும் நீதிபதி உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT