க்ரைம்

கல்லூரி மாணவி கத்தியால் வெட்டப்பட்ட வழக்கில் கஞ்சா போதை இளைஞர்கள் 4 பேர் சிறையிலடைப்பு

செய்திப்பிரிவு

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே வல்​லூர் பகு​தியை சேர்ந்த மாண​வி, சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள கல்​லூரி​யில் பி.​காம் 2-ம் ஆண்டு படிக்​கிறார். தற்​போது பரு​வத் தேர்வு நடை​பெற்று வரு​வ​தால், கடந்த 14-ம் தேதி இரவு வீட்​டின் முதல் மாடி​யில் படித்​துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, கஞ்சா போதை​யில் இருந்த இளைஞர்​கள் 4 பேர், வீட்​டின் பின்​புறம் உள்ள முட்​புதர் வழி​யாக பக்​கத்து வீட்டு மாடி​யில் ஏறி, மாண​வி​யின் வீட்டு முதல் மாடிக்கு தாவி அங்​குள்ள பொருட்​களை திருட முயன்​ற​தாக கூறப்​படு​கிறது.

அவர்​களை கண்​டதும் மாணவி கூச்சலிட்டதால், இளைஞர்​கள் மாண​வியை கத்​தி​யால் வெட்​டி​விட்டு தப்​பினர். இதில் பலத்த காயமடைந்த மாண​வி​யின் அலறல் கேட்டு முதல் மாடிக்கு சென்ற அவரது பெற்​றோர், சகோ​தரர், அக்​கம் பக்​கத்​தினர் தப்பி ஓடிய இளைஞர்​களை பிடிக்க விரட்​டினர்.

இதில், 3 பேர் தப்​பிய நிலை​யில், வல்​லூரை அடுத்த அத்​திப்​பட்டு பகு​தியை சேர்ந்த டில்​லி​பாபு என்ற ரோலக்ஸ் (23) பிடிபட்​டார். மீஞ்​சூர் போலீ​ஸாரிடம் பொது​மக்​கள் அவரை ஒப்​படைத்​தனர்.

தாக்​குதலுக்​குள்​ளான மாணவி மீஞ்​சூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்த மீஞ்​சூர் போலீ​ஸார், டில்​லி​பாபுவை கைது செய்​தனர்.

தொடர்ந்​து, தனிப்​படை போலீ​ஸார், தப்​பியோடி தலைமறை​வாக இருந்த வல்​லூர் பகு​தியை சேர்ந்த சித்​திக் (19), லோகேஷ் (22), அத்​திப்​பட்​டு, பாலமேடு பகு​தியை சேர்ந்த முத்​தமிழ்​செல்​வன் (24) ஆகிய 3 பேரை​யும் நேற்று முன் தினம் இரவு கைது செய்​தனர்.

நால்​வரும் பொன்​னேரி ஜே.எம்-1 நீதி​மன்ற நீதிபதி முன்பு ஆஜர்​படுத்​தப்​பட்டு சென்​னை, புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT