க்ரைம்

ஆசிர்வாதம் செய்வதாக ஏமாற்றி வடமாநில இளைஞரிடம் வழிப்பறி: திருநங்கைகள் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்​தவர் பிர​சாந்த் (30). சென்னை புழல் பகு​தி​யில் தங்​கி, தனி​யார் நிறு​வனத்​தில் சுமை தூக்​கும் தொழிலா​ளி​யாக வேலை செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், இவர் நேற்று முன்​தினம் இரவு, புழல்- செங்​குன்​றம் நெடுஞ்​சாலை வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, அங்கு வந்த 4 திருநங்கைகள், பிர​சாந்த்தை வழிமறித்து தடுத்து நிறுத்​தி, ஆசிர்​வாதம் செய்​தனர்.

இதையடுத்​து, உடடின​யாக பிர​சாந்த் ரூ.20 கொடுத்​துள்​ளார். இந்த பணம் போதாது என கூறி, திருநங்கைகள் தகராறில் ஈடு​பட்​டு, அவரிட​மிருந்த ஆயிரம் ரூபாயை பறித்து தப்​பினர்.

இதை சற்​றும் எதிர்​பா​ராத பிர​சாந்த், புழல் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில், வியாசர்​பாடி, திருநின்​றவூர், பொன்​னேரி ஆகிய பகு​தி​களைச் சேர்ந்த 4 திருநங்​கைககள் அடை​யாளம் காணப்​பட்​டனர். அவர்​களை கைது செய்து போலீ​ஸார் வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT