சிவாச்சாரியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கார்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், வேலு.

 
க்ரைம்

சிவாச்சாரியார் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

செய்திப்பிரிவு

கும்பகோணம்: சி​வாச்​சா​ரி​யாரை கொலை செய்த வழக்​கில் 4 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து கும்​பகோணம் நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. சேலம் மாவட்​டம் சீல​நாயக்​கன்​பட்டி பெரு​மாள் கோ​யில் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் ராமமூர்த்​தி.

இவரது மகன் மணி​கண்​டன்​(45). இவர்​கள் பாப​நாசம் வட்​டம் திரு​வைக்​காவூர் சிவன்​கோ​யில் தெரு​வில் வசித்து வந்தனர். அங்​குள்ள சிவன் கோயி​லில் ராமமூர்த்​தி​யும், ஆடு​துறை​யில் உள்ள சிவன் கோயி​லில் மணி​கண்​ட​னும் பூஜை செய்து வந்​தனர்.

இந்​நிலை​யில், 2015 ஜூன் மாதம் திரு​வைக்​காவூர் மேலத்​தெருவை சேர்ந்த கார்த்​தி(39), சிவாச்​சா​ரி​யார் மணி​கண்​டனை சந்​தித்​து, தனது திரு​மணத்தை நடத்தி வைக்​கு​மாறு அழைத்​துள்​ளார். ஆனால், ஏற்​கெனவே வேறு திரு​மணத்​துக்கு முன்​பணம் வாங்​கி​விட்​ட​தால் வர இயலாது என மணி​கண்​டன் கூறி​யுள்​ளார். இது தொடர்​பாக இரு​வருக்​குமிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சிவாச்​சா​ரி​யார் மணி​கண்​டன் இருசக்கர வாக​னத்​தில் பட்​ட​வர்த்தி பகு​தி​யில் சென்​ற​போது, அங்கு மறைந்​திருந்த கார்த்​தி, அவரது உறவினர் அரவிந்​த​ராஜ்(35) மற்​றும் ராஜா (எ) ஹரி​ராஜா(25), வெங்​கடேசன்​(32), வேலு (எ) ஜெய​வேல்​(36) ஆகியோர் வழிமறித்து மணி​கண்​டனை கட்​டைகளால் தாக்​கி​யுள்​ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மணி​கண்​டன் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டு, அங்கு உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக கபிஸ்​தலம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி 5 பேரை​யும் கைது செய்​தனர். இந்த வழக்கு கும்​பகோணம் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. விசா​ரணை​யின்​போது குற்​றம் சாட்​டப்​பட்ட ராஜா உயி​ரிழந்​தார்.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி, குற்​றம் சாட்​டப்​பட்ட கார்த்​தி, அரவிந்​த​ராஜ், வெங்​கடேசன், வேலு ஆகியோ​ருக்கு ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ.7,500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். மேலும், உயி​ரிழந்த மணி​கண்​டன் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில் ரூ.5 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறும் உத்​தர​விட்​டார். இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் பா.​விஜயகு​மார் ஆஜரா​னார்.

SCROLL FOR NEXT