க்ரைம்

சென்னை | வியாபாரிகளை கடத்தி பணம் பறிக்க கத்தி, மிளகாய்ப் பொடியுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வியா​பாரி​களை கடத்தி பணம் பறிக்க கத்​தி, மிள​காய்ப் பொடி​யுடன் பதுங்கி இருந்த 5 பேர் கும்​பலை போலீ​ஸார் கைது செய்​தனர். குற்​றச் செயல்​களை தடுக்​கும் வகை​யில், முன்​னெச்​சரிக்​கை​யாக போலீ​ஸார் ரோந்து பணியை முடுக்கி விட்​டுள்​ளனர்.

அதன்​படி, ஆர்​.கே.நகர் போலீ​ஸார் நேற்​று​முன்​தினம் காலை ஆர்​.கே.நகர் பகு​தி​யில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அங்​குள்ள சுண்​ணாம்பு கால்​வாய் புதிய மேம்​பாலத்​தின் கீழ், சந்​தேகத்​திற்​கிட​மாக நின்​றிருந்த 5 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில், அவர்​கள் ஏடிஎம் மையங்​களில் இருந்து தனி​யாக பணம் எடுத்து வரும் நபர்​களை​யும், சாலை​யில் செல்​லும் வியா​பாரி​களை​யும் வழிமறித்​து, கடத்தி கூட்டு கொள்​ளை​யில் ஈடுபட திட்​ட​மிட்​டு, கத்​தி​கள், மிள​காய்ப் பொடி மற்​றும் கட்​டைகளு​டன் ஆயத்​த​மாக இருந்​தது தெரிய வந்​தது.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், பிடிபட்​ட​வர்​கள் தண்​டை​யார்​பேட்டை துர்​காதேவி நகரைச் சேர்ந்த முகிலன் (21), நெடுஞ்​செழியன் நகர் லோகேஷ்​ராஜ் (20), கொருக்​குப்​பேட்டை திரு​நாவுக்​கரசு தோட்​டத்​தைச் சேர்ந்த மணி​மாறன் (21), அபினேஷ் (25), தண்​டை​யார்​பேட்டை மாதா கோயில் தெரு​வைச் சேர்ந்த அமீது (22) என்​பது தெரிந்​தது.

பல்வேறு வழக்குகள்..

இதையடுத்​து, 5 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 2 கத்​தி​கள் மற்​றும் 2 கட்​டைகள், மிள​காய் பொடி மற்​றும் பைக்​கு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

கைது செய்​யப்​பட்ட முகிலன் மீது ஏற்​க​னவே கொலை, திருட்​டு, வழிப்​பறி உள்​ளிட்ட 7 வழக்​கு​களும், லோகேஷ்​ராஜ் மீது கொலை, அடிதடி, வழிப்​பறி உள்​ளிட்ட 3 வழக்​கு​களும், அமீது மீது ஒரு அடிதடி வழக்​கும் இருப்​பது தெரிய வந்​தது.

மேலும், முகிலன் மற்​றும் லோகேஷ்​ராஜ் ஆகியோர் ஆர்​.கே.நகர் காவல் நிலை​யத்​தின் சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி​கள் என்​பதும்​ போலீஸ்​ விசாரணையில் உறுதியானது.

SCROLL FOR NEXT