க்ரைம்

எப்ஐஆர் நகல் ஆன்லைனில் 48 மணி நேரத்தில் பதிவேற்றம்: அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் உணர்​வுப்​பூர்​வ​மான வழக்​கு​களை தவிர, பிற அனைத்து குற்ற வழக்​கு​களின் முதல் தகவல் அறிக்கையை அனை​வரும் பார்க்​கும் வகை​யில் ஆன்லைனில் பதிவேற்​றம் செய்யக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அந்த மனு​வில், காவல் நிலை​யங்​களில் பெண்​கள் மீதான வன்கொடுமை, பாலியல் குற்​றங்​கள் மற்​றும் வன்​கொடுமை சட்​ட வழக்​கு​களைத் தவிர்த்து, மற்ற வழக்​கு​களின் முதல் தகவல் அறிக்கைகள் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்​யப்​பட்டு அனை​வரும் பார்க்​கும் வசதி முன்பு இருந்​தது.

தற்​போது சிசிடிஎன்​எஸ் 2.0 திட்​டத்​தில் முதல் தகவல் அறிக்கையை புகார் அளித்த நபர் மற்றும் விசா​ரணை அதி​காரி மட்​டுமே பதி​விறக்​கம் செய்​யும் வசதி​யுள்​ளது.

எனவே, பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்றங்​கள் போன்ற வழக்​கு​களைத் தவிர மற்ற வழக்​கு​களின் முதல் தகவல் அறிக்கை நகலை பொது​மக்​கள், வழக்​கறிஞர்​கள் ஆன்​லைனில் பார்க்​கும் வசதியை ஏற்படுத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசா​ரித்​தது. அப்​போது அரசு தரப்பில், முதல் தகவல் அறிக்கை நகலை புகார்​தா​ரர்​கள், குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள், பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் பார்வை​யிட ஏற்​கெனவே வசதி உள்​ளது. போக்ஸோ மற்றும் சில குறிப்​பிட்ட வழக்​கு​களைத் தவிர பிற வழக்​கு​களின் முதல் தகவல் அறிக்கை 48 மணி நேரத்​தில் ஆன்லைனில் பதிவேற்​றம் செய்​யப்​படு​கிறது எனத் தெரிவிக்கப்பட்​டது.

SCROLL FOR NEXT