க்ரைம்

ஓசூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி மனு கொடுக்க சென்ற விவசாயிகள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஓசூர் பன்​னாட்டு வி​மான நிலை​யம், அறி​வு​சார் வழித்தடம், சிப்​காட் மற்​றும் சிறப்பு பொருளா​தார மண்டல திட்​டங்களுக்​காக, விவ​சாய நிலங்​களை கையகப்​படுத்​து​வதற்கு ஓசூரை சேர்ந்த நமது நிலம் நமதே விவ​சா​யிகள் நலச் சங்​கம் எதிர்ப்பு தெரி​வித்து வருகிறது.

விளைநிலங்​களை பாது​காப்​ப​தன் அவசி​யத்தை வலி​யுறுத்​த​வும், அதனால் ஏற்​படும் விளைவு​கள் குறித்​தும் விவரிக்க சென்​னை​யில் நேற்று பத்​திரிக்​கை​யாளர் சந்திப்பு நடத்த ஏற்​பாடு செய்திருந்​தனர்.

          

அதற்கு முன்​ன​தாக முக்​கிய அரசி​யல் கட்​சிகளை சந்​தித்து மனு கொடுக்க திட்ட​மிட்​டனர். அதன்படி சங்​கத்​தின் மாநில தலை​வர் குமார ரவிக்​கு​மார் தலை​மை​யில் 67 பேர் தி​முக தலைமை அலுவலக​மான அண்ணா அறிவால​யம் சென்​றனர்.

ஆனால் அதி​கப்படி​யான கூட்​டம் வந்ததால் போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர். இந்​நிலை​யில், கைது செய்யப்​பட்ட குமார ரவிக்​கு​மார் கூறுகையில், “ கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்​டத்​தில் உள்ள தசப்​பள்​ளி, கருப்​பள்​ளி, நந்தி மங்​கலம் உள்​ளிட்ட கிராமங்​கள் அதனைச் சுற்​றி​யுள்ள குக்​கி​ராமங்​களில் உள்ள வளமான விளைநிலங்கள், எங்​களது வரு​மானத்​துக்​கான ஒரே ஆதா​ர​மாக​வும் விளங்​கு​கிறது.

பெரிய அளவி​லான தொழில் திட்​டங்​களி​லிருந்து இந்த வளமான விளைநிலங்​களுக்கு விலக்கு அளிக்க வேண்​டும் என்​பது எங்​கள் கோரிக்​கை. இதை வலி​யுறுத்தி மனு கொடுக்க சென்​ற​போது போலீ​ஸார்​ எங்​களை கைது செய்​தனர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT