க்ரைம்

வாழப்பாடி அருகே திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

சேலம்: ​வாழப்பாடி அருகேயுள்ள கருமந்துறையில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்​டம் வாழப்​பாடியை அடுத்த கல்​வ​ராயன் மலை கரு​மந்​துறை அரு​கே​யுள்ள கிராங்​காடு கிராமத்​தைச் சேர்ந்​தவர் ராஜேந்​திரன்​(45). திமுக கிளைச் செய​லா​ள​ரான இவருக்​கு, மனைவி சரிதா (40), மகள்​கள் கோகிலா, பரிமளா, மகன் நவீன் ஆகியோர் உள்​ளனர். ராஜேந்​திரனுக்​கும், பக்​கத்து தோட்​டத்​தில் வசித்து வரும் இவரது உறவினர்​களான ராஜ​மாணிக்​கம், பழனி​சாமி ஆகியோ​ருக்​குமிடையே நிலத்​தக​ராறு காரண​மாக முன்​விரோதம் இருந்​துள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு ராஜேந்​திரன், மனைவி சரி​தாவுடன் இருசக்கர வாக​னத்​தில் வீட்​டில் இருந்து தோட்​டத்​துக்கு சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, சாலை​யில் பள்​ளம் இருந்​த​தால் மனை​வியை இறக்​கி​விட்​டு, இருசக்கர வாக​னத்தை மெது​வாக இயக்​கி​யுள்​ளார்.

அப்​போது வனப் பகு​தி​யில் மறைந்​திருந்த மர்ம நபர்​கள் நாட்​டுத் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் ராஜேந்​திரன் உடலில் குண்டு பாய்ந்து அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னர், அங்​கிருந்த மர்ம நபர்​கள் தப்​பியோடினர். கண்​முன்னே கணவர் கொல்​லப்​பட்​டதைப் பார்த்து மனைவி சரிதா கதறி அழு​தார். இதையடுத்​து, அப்​பகு​திக்கு வந்த கிராம மக்​கள், போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். கரியக்​கோ​யில் மற்​றும் கரு​மந்​துறை போலீ​ஸார் அங்கு வந்​து, ராஜேந்​திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

சேலம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கவுதம் கோயல் நேற்று காலை சம்பவ இடத்​தில் விசா​ரணை மேற்​கொண்​டார். கொலை தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதற்​கிடை​யில், கொலை தொடர்​பாக சந்​தேகப்​படும் நபர்​கள் இரு​வரைப் பிடித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

ராஜேந்​திரனை சுட்​டுக் கொன்ற இடத்​தில் மனைவி சரிதா மட்​டுமே இருந்​த​தால், அங்கு எத்​தனை பேர் இருந்​தார்​கள், எப்​படி தப்​பித்து ஓடி​னார்​கள் உள்​ளிட்ட விவரங்​களை சரி​தா​விடம் போலீ​ஸார் கேட்​டறிந்​தனர். மேலும், ராஜேந்​திரனுக்​கும், வேறு யாருக்​கும் முன்​விரோதம் உள்​ளதா அல்​லது மிரட்​டல் விடுக்​கப்​பட்டதா என்​றும் போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

அப்​போது, நிலத்​தக​ராறு குறித்து சரிதா போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார். நிலம் தொடர்​பாக காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு, நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடந்து வந்​ததை​யும் போலீ​ஸார் கேட்​டறிந்​தனர். நிலத்​தக​ராறு தொடர்​பான் முன்​விரோதம் காரண​மாக கொலை நடந்​துள்​ளதா அல்​லது வேறு ஏதேனும் காரணம் உள்​ளதா என்​றும் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. மேலும், குற்​ற​வாளி​களைப் பிடிக்க 3 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

நாட்​டுத் துப்​பாக்​கி​யால் சுடப்​பட்டு கொலை நடந்​துள்​ள​தால், அப்​பகு​தி​யில் நாட்​டுத் துப்​பாக்கி வைத்​துள்​ளவர்​கள் யார் என்​பது குறித்​தும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சேலத்​தில் இருந்து வரவழைக்​கப்​பட்ட மோப்ப நாய் வீட்​டில் இருந்து சிறிது தூரம் சென்​று​விட்​டு, பின்​னர் திரும்பி வந்து விட்​டது. மேலும், கைரேகை நிபுணர்​கள் வரவழைக்​கப்​பட்​டு, அப்​பகு​தி​யில் உள்ள தடயங்​கள் சேகரிக்​கப்​பட்​டன.

இதனிடையே, ராஜேந்​திரன் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்​யப்​படு​கிறது. இதையொட்​டி, அரசு மருத்​து​வ​மனை மற்​றும் அவரது கிராமத்​தில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். திமுக பிர​முகர் நாட்​டுத் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்​லப்​பட்ட சம்​பவம் சேலத்​தில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

அன்புமணி கண்டனம்: ​பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தி​முக நிர்வாகி ராஜேந்​திரன் துப்​பாக்​கி​யால் சுட்​டுக்​கொல்லப்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சி​யளிக்​கிறது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு நிலை மோசமடைந்​துள்​ளது. மக்​களைப் பாது​காக்​கத் தவறிய திமுக, தொடர்ந்து ஆட்சி செய்​யும் உரிமையை இழந்து விட்​டது. தங்​களை காக்​கத் தவறிய திமுக​வுக்கு மக்​கள் சரி​யான தண்​டனை அளிப்​பார்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT