க்ரைம்

மோசடி கும்பல்களிடமிருந்து ஒரே மாதத்தில் ரூ.2 கோடி மீட்பு: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம், டிஜிட்​டல் கைது, ஆன்​லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்​சி, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் மோசடிகளைத் தடுக்​க​வும், மக்​கள் இழந்த பணத்தை மீட்​க​வும், குற்​ற​வாளி​களைக் கைது செய்​ய​வும் சென்னை காவல் துறை பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டு வருகிறது.

அதன் ஒரு பகு​தி​யாக சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும் சென்​னை​யில் உள்ள 4 மண்​டலங்​களி​லும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்​யேக​மாக செயல்​பட்டு வருகிறது.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் இவற்​றில் எங்​கேனும் புகார் தெரி​வித்​தால் மோசடி வங்​கிக் கணக்​கு​களை உடனடி​யாக முடக்​குதல், நீதி​மன்ற உத்​தர​வு​களின் அடிப்​படை​யில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு முடக்​கப்​பட்ட தொகையை திரும்ப பெற்​றுக் கொடுத்​தல் மற்​றும் சைபர் குற்ற வழக்​கு​களில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தல் ஆகிய பணி​களை சைபர் க்ரைம் போலீ​ஸார் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

அந்த வகை​யில் கடத்த மாதத்​தில் (நவம்​பர்) மட்​டும் ரூ.2 கோடியே 4 லட்​சத்து 92,483-ஐ சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் மீட்​டு, அந்த பணத்தை இழந்​தவர்​களிடம் ஒப்​படைத்​துள்​ளனர்.

மேலும் நடப்பு 2025-ம் ஆண்​டில் இது​வரை ரூ.24 கோடியே 92 லட்​சத்து 13,483 மீட்​கப்​பட்டு உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT