க்ரைம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: கோவை காவலர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

கோவை: ​காட்​பாடி அருகே ரயி​லில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக போலீஸ்​காரர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார்.

கோவை ஆர்​.எஸ்​.புரம் காவல் நிலை​யத்​தில் காவல​ராகப் பணிபுரிந்து வருபவர் ஷேக் முகமது. கடந்த வாரம் சென்​னையி​லிருந்து இன்​டர்​சிட்டி எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் கோவை வந்​துள்​ளார்.

அப்​போது, ரயி​லில் உடன் பயணித்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதை செல்​போனில் பதிவு செய்த மாண​வி, காட்​பாடி போலீ​ஸில் புகா​ராக அளித்​தார். இதன் பேரில் காட்​பாடி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மாணவி எடுத்​திருந்த வீடியோ பதிவு​களின் அடிப்​படை​யிலும், காவல் துறை​யில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​ட​தா​லும் காவலர் ஷேக் முகமதுவை சஸ்​பெண்ட் செய்து கோவை மாநகர காவல் துணை ஆணை​யர் கார்த்​தி​கேயன் உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT