இனாவோபி சிங்

 
க்ரைம்

5 மாநிலங்கள், 6 தனிப்படைகள், 14 பேர் கைது: வடமாநில சைபர் மோசடி கும்பல் வலையமைப்பை உடைத்த சென்னை போலீஸ்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: வட மாநில சைபர் மோசடி கும்​பல் கைது செய்​யப்​பட்ட வழக்​கில் மோசடி தொடர்​பாக பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. சமீபகால​மாக, சிபிஐ, அமலாக்​கத் துறை, வரு​மான வரித்​துறை அல்​லது காவல்​துறை அதி​காரி​கள் என தங்​களை அறி​முகப்​படுத்​தி, `உங்​கள் ஆதார் எண் குற்ற வழக்​கில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது', `உங்​களை டிஜிட்​டல் கைது செய்​துள்​ளோம்' என்று கூறி வீடியோ அழைப்​பின் மூலம் பொது​மக்​களை அச்​சுறுத்தி பணம் பறிக்​கும் சம்​பவங்​கள் நாடு முழு​வதும் நடை​பெறுகின்​றன.

மேலும் அதிக லாபம் தரும் முதலீடு, ஆன்​லைன் பங்கு வர்த்​தகம், கிரிப்டோ முதலீடு, போலி வேலை​வாய்ப்பு போன்​றவை மூலம் பணம் பறிக்​கும் மோசடிகளும் அதி​கரித்து வரு​கின்​றன.

சென்​னை​யில் இது​போன்ற 8 வழக்​கு​களில் ரூ.31.10 கோடி மோசடி நடந்​தது தொடர்​பாக காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின்​பேரில், மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் தேன்​மொழி மேற்​பார்​வை​யில், சைபர் க்ரைம் துணை ஆணை​யர் பால​கிருஷ்ணன் தலை​மை​யில் 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.

இந்த குழுக்​கள் மேற்கு வங்​காளம், உத்​தரப்​பிரதேசம், கர்​நாட​கா, மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான் ஆகிய 5 மாநிலங்​களுக்​குச் சென்று உள்​ளூர் போலீ​ஸாருடன் இணைந்து 14 பேரை கைதுசெய்து புழல் சிறை​யில் அடைத்​தது. விசா​ரணை​யில் ஒரு டிஜிட்​டல் கைது மோசடி வழக்​கில் மட்​டும் ரூ.14.74 கோடி பறிக்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் வங்​கிப் பரிவர்த்​தனை​களை ஆய்வு செய்​த​தில் ரூ.4.78 கோடி மோசடி பணத்​தின் தடயங்​கள் கண்​டறியப்​பட்​டன. மேலும் நீதி​மன்ற உத்​தர​வின் மூலம் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.1.94 கோடி மீட்​டுத் தரப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கின் முக்​கிய நபராகக் கருதப்​படும் மணிப்​பூரைச் சேர்ந்த தவு​னாவ்​ஜம் இனாவோபி சிங் (35), என்​பவர் கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார்.

ஆன்​லைன் வர்த்தக மோசடி​யில் சிக்​கிய முதி​ய​வரின் வங்​கிக் கணக்​கி​லிருந்து ரூ.20 லட்​சத்தை கும்​பலுக்கு மாற்​று​வ​தில் இவர் முக்​கியப் பங்கு வகித்​துள்​ளார்.

சந்​தேகம் வராமல் இருக்க டெலிவரி ஊழியர் போல் உடையணிந்​து, பல மொழிகளில் பேசும் திறனை பயன்​படுத்தி மாநிலங்​களுக்கு இடையே பணம் மற்​றும் ஆவணங்​களை பாது​காப்​பாக பரி​மாற்​றியதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இவரிட​மிருந்து செல்​போன்​கள், சிம் கார்​டு​கள், டேப்​லெட், 23 ஏடிஎம் கார்​டு​கள், காசோலைகள், வங்கி பாஸ் புத்​தகங்​கள், பாஸ்​போர்ட், ஆதார்,

பான் அட்​டைகள், வாடகை ஒப்​பந்​தங்​கள் உள்​ளிட்ட ஏராள​மான ஆதா​ரங்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர். மற்ற குற்​ற​வாளி​களிட​மிருந்​தும் முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் டிஜிட்​டல் சாதனங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன.

தனித்​தனி குழுக்கள்

விசா​ரணை​யில் மோசடி கும்​பல் மிக​வும் திட்​ட​மிட்ட முறை​யில் செயல்​பட்​டதும் தெரிய​வந்​துள்​ளது. போலி வங்​கிக் கணக்​கு​களை ஏற்​பாடு செய்​தல், மோசடி பணத்தை பல கணக்​கு​களுக்கு மாற்​று​தல், அந்​தப் பணத்தை ரொக்​க​மாக மாற்றி கைமாறச் செய்​தல் ஆகிய​வற்றை தனித்​தனி குழுக்​களாக சேர்ந்து செய்​துள்​ளனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், ``சி.பி.ஐ., அமலாக்​கத் துறை, வரு​மான வரித்​துறை அல்​லது போலீஸ் அதி​காரி​கள் யாரும் வீடியோ அழைப்​பில் `டிஜிட்​டல் கைது' செய்​வ​தில்​லை.

வங்கி விவரங்​களை​யோ, ஓடிபி எண்​ணையோ கேட்​பது​மில்​லை. அதிக லாபம் தரு​வ​தாகக் கூறும் முதலீட்டு இணைப்​பு​கள், அறி​முகமில்​லாத நபர்​களின் முதலீட்டு ஆலோ​சனை​கள் மற்​றும் சமூக வலை​தளங்​களில் வரும் நிதிச் சலுகைகளை நம்​பக் கூடாது.

இது​போன்ற மோசடிகளை சந்​தித்​தால் உடனடி​யாக `1930' என்ற தேசிய சைபர் உதவி எண்ணை தொடர்​பு​கொண்டு புகார் அளிக்க வேண்​டும்.

மேலும் www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தி​லும் உடனடி​யாக புகார் பதிவு செய்​தால், மோசடி செய்​யப்​பட்​ட தொகை​யை முடக்​கு​வதற்​கான வாய்ப்​பு அதி​கரிக்​கும்​'' என்​றனர்​.

SCROLL FOR NEXT