கொலையாளிகளை கைது செய்யக்கோரி, மறியலில் ஈடுபட்ட மக்கள். (உள்படம்) கொலை செய்யப்பட்ட திருமுகம்.

 
க்ரைம்

திருவாரூர் அருகே செங்கல் சூளை மேஸ்திரி வீடு புகுந்து கொலை: வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது

தடுக்க வந்த மனைவி, மகன், மகள் மீதும் தாக்குதல்

செய்திப்பிரிவு

திருவாரூர்: ​​திரு​வாரூர் அருகே வீடு புகுந்து செங்​கல் சூளை மேஸ்​திரியை ஒரு கும்​பல் வெட்டி படு​கொலை செய்​தது. இதுதொடர்​பாக வழக்​கறிஞர் உள்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திரு​வாரூர் மாவட்​டம் சேங்​காலிபுரம் எம்​ஜிஆர் நகரைச் சேர்ந்​தவர் திரு​முகம்​(48). செங்​கல் சூளை மேஸ்​திரி. இவர், தனது வீட்​டில் குடும்​பத்​தினருடன் நேற்று முன்​தினம் இரவு தூங்​கி​கொண்​டிருந்​தார். அப்​போது நேற்று அதி​காலை 6 பேர் கொண்ட கும்​பல் வீட்​டின் கதவை உடைத்​துக்​கொண்டு உள்ளே புகுந்து திரு​முகத்தை சரமாரி​யாக வெட்டி படு​கொலை செய்​தது. இதைத் தடுக்க வந்த திரு​முகத்​தின் மனைவி சுதா, மகன், மகள் ஆகியோரை​யும் அந்த கும்​பல் தாக்​கியது. பின்​னர் மோட்​டார் சைக்​கிள்​களில் தப்​பிச் சென்​றது.

இதில், திரு​முகம் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். படு​காயமடைந்த சுதா, தஞ்சை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இதுகுறித்து குட​வாசல் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதனிடையே, கொலை​யாளிகளை உடனடி​யாக கைது செய்​யக் கோரி பொது​மக்​கள் திரு​வாரூர்- கும்​பகோணம் சாலை​யில் மறியலில் ஈடு​பட்​டனர். பின்​னர், சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில், திரு​முகத்​தின் உறவின​ரான, வடகண்​டம் பகு​தி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் ராஜா என்​பவரை பிடித்து விசா​ரித்​தனர். இதில், நிலத்​தக​ராறு தொடர்​பாக இந்​தக் கொலை நடந்​தது தெரிய​வந்​தது.

நண்​பர்​கள் கண்​மணி, திரு​வாரூர் மணி​கண்​டன், தீபன் மற்​றும் 2 பேருடன் சேர்ந்து ராஜா இந்த கொலையை செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, 4 பேரையும் கைது செய்த போலீ​ஸார்​, மேலும்​ 2 பேரை தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT