க்ரைம்

முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

செய்திப்பிரிவு

சென்னை: எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், தன்னை வினோத்​கு​மார் என அறி​முகம் செய்து கொண்​டு, `முதல்​வர் ஸ்டா​லின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன்.

அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும்' எனக்​கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். இதையடுத்து, ஆழ்​வார்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் வீட்​டுக்​குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடை​பெற்றது.

சந்​தேகப்​படும்​படி​யான எந்த ஒரு பொருளும் கிடைக்​காத​தால் புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் மிரட்​டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்​டனர்.

அப்​போது எதிர்​முனை​யில் பேசிய நபர், ``என் பெயர் வினோத்​கு​மார். நான் தாம்​பரம் சேலை​யூர் கேம்ப் ரோட்​டில் உள்ள டாஸ்​மாக் கடை முன்பு நின்று கொண்​டிருக்​கிறேன். அடை​யாளம் தெரி​யாத இரு​வர் என்னை பலமாக தாக்​கினர்.

இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தும் போலீ​ஸார் வரவில்​லை. இதனால் ஏற்​பட்ட ஆத்​திரத்​தில் முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தேன்'' என தெரி​வித்​தார். இதையடுத்​து, போலீ​ஸார் சேலை​யூர் விரைந்து மதுபோதையில் இருந்த வினோத்​கு​மாரை பிடித்து காவல் நிலை​யம் அழைத்து வந்து வி​சா​ரித்​தனர். பின்​னர்​ அவரை எச்​சரித்​து அனுப்​பி வைத்​தனர்​.

SCROLL FOR NEXT