க்ரைம்

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பல மாநிலங்களில் வயதானவர்களிடம் பண மோசடி செய்த ஆந்திர இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்க உதவுவது​போல வயதானவர்​கள், மாற்​றுத் திற​னாளி​களை குறி​வைத்து பல மாநிலங்​களில் பண மோசடி​யில் ஈடு​பட்ட ஆந்​திர இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மதுரை மாவட்​டத்​தைச் சேர்ந்த பார்​வைத்​திறனற்ற மாற்​றுத் திற​னாளி பாண்​டியன் (61). இவர் வேலை நிமித்​த​மாக சென்னை வந்து கடந்த 31-ம் தேதி சென்னை பல்​கலைக்​கழக வாளகத்​தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்​கச் சென்​றார்.

          

அப்​போது அங்கு வந்த நபர் ஒரு​வர் பாண்​டியனிடம் பணம் எடுக்க உதவி செய்​வ​தாகக் கூறி ஏடிஎம் கார்டு மற்​றும் பின் நம்​பரை வாங்கி ஏடிஎம் இயந்​திரத்​தில் போட்​டு​விட்​டு, பணம் இல்லை என்று கூறி அவரை ஏமாற்​றி, மறைத்து வைத்​திருந்த மற்​றொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்​பி​யுள்​ளார்.

பின்​னர் அந்த நபர் பாண்​டியனின் ஏடிஎம் கார்டை அரு​கில் உள்ள வேறு ஏடிஎம் மையத்​தில் பயன்​படுத்தி ரூ.23,500-ஐ எடுத்​த​போது, பாண்​டியனின் செல்​போனுக்கு குறுஞ்​செய்தி வந்​தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இந்த விவ​காரம் தொடர்​பாக அண்​ணாசதுக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக வங்கி ஏடிஎம் மையத்​தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர். இதில் முதி​ய​வரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடு​பட்​டது ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த சிடா​தாலா சுனில் (27) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரிட​மிருந்து ஒரு செல்​போன், 79 ஏடிஎம் கார்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. போலீ​ஸாரின் விசா​ரணை​யில், சிடா​தாலா சுனில் ஆந்​திர மாநிலத்​தில் பெட்​ரோல் பங்​க்கில் வேலை செய்து வந்​துள்​ளார்.

இவர் ஏடிஎம் மையங்​களில் பொது​மக்​கள் மறந்து விட்​டுச்​செல்​லும் ஏடிஎம் கார்​டு​களை எடுத்து வைத்​துக்​கொண்டு பார்​வையற்ற மாற்​றுத் திற​னாளி​கள், வயதானவர்​களைக் குறி​வைத்து ஏமாற்றி பணத்​தைத் திருடி வந்​தது தெரிந்​தது. இதே​போல பல்​வேறு மாநிலங்​களில் கைவரிசை காட்​டி​யுள்​ளார் எனத் தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

SCROLL FOR NEXT