க்ரைம்

சைபர் அடிமை வேலைக்கு தமிழகத்திலிருந்து கம்போடியாவுக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய முகவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​திலிருந்து கம்​போடி​யா​வுக்கு சைபர் அடிமை வேலைக்கு இளைஞர்​களை ஏமாற்றி அனுப்​பிய, மதுரையைச் சேர்ந்த உணவக உரிமை​யாள​ரான முகவரை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

அதிக சம்​பளத்​தில் கம்​போடி​யா​வில் வேலை என்ற ஆசை வார்த்​தையை நம்​பி, திருப்​பத்​தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர், முகவர் மூலம், கம்​போடியா நாட்​டுக்கு அண்​மை​யில் சென்​றார். ஆனால், அங்கு அவர் சைபர் மோசடி கும்​பலிடம் ஒப்​படைக்​கப்​பட்​டார்.

பின்​னர், ஒரு​வழி​யாக அவர் அங்​கிருந்து தப்​பி, கம்​போடி​யா​வில் உள்ள இந்​திய தூதரகம் சென்று முறை​யிட்​டார். பின்​னர், அவர் மீட்​கப்​பட்டு அங்​கிருந்து தமிழகம் அனுப்பி வைக்​கப்​பட்​டார்.

தமிழகம் வந்​தடைந்த அந்த இளைஞர், கம்​போடியா நாட்​டுக்கு சைபர் அடிமை வேலைக்கு இளைஞர்​கள் ஏமாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டது தொடர்​பாக தமிழக சைபர் க்ரைம் போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். அதனடிப்​படை​யில், விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

இதில், தமிழகம் முழு​வதும் ஒரு கும்​பல் கம்​போடி​யா​வில் அதிக சம்​பளத்​துடன் நல்ல வேலை இருப்​ப​தாக ஏமாற்றி அழைத்​துச் சென்​று, அங்கு கட்​டாயப்​படுத்தி சைபர் அடிமை வேலை செய்ய வைப்​பதும், செய்ய மறுக்​கும் இளைஞர்​களை சித்​திர​வதை செய்து துன்​புறுத்​து​வதும், சைபர் அடிமை​களாக செயல்​படும் இளைஞர்​களை ஆன்​லைன் நிதி மோசடி, டிஜிட்​டல் கைது உள்​ளிட்ட நிதி சார்ந்த மோசடிகளில் ஈடுபட வைத்து சட்​ட​விரோத​மாக பணம் ஈட்​டு​வதும் தெரிய வந்​தது.

திருப்​பத்​தூர் இளைஞர் கொடுத்த தகவலின் அடிப்​படை​யில், தமிழக இளைஞர்​களை ஏமாற்றி கம்​போடி​யா​வுக்கு அழைத்​துச் சென்று சைபர் அடிமை​யாக்​கும் மதுரையைச் சேர்ந்த மதன் வடிவேல் என்ற முகவரை சைபர் க்ரைம் போலீ​ஸார் நேற்​று ​முன்​தினம் கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட மதன் வடிவேல், கம்​போடி​யா​வில் ‘ஜல்​லிக்​கட்​டு’ என்ற பெயரில் 4 உணவகங்​களை நடத்தி வரு​வதும், சைபர் அடிமை​களாக தங்க வைக்​கப்​பட்​டிருக்​கும் தமிழக இளைஞர்​கள் முகா​முக்கு உணவு விநி​யோகம் செய்​வதும் தெரிய வந்​தது.

மேலும், தமிழகத்​தில் இருந்து இளைஞர்​களை கம்​போடி​யா​வுக்கு அழைத்​துச் செல்​லும் நடவடிக்​கை​யில், மதன் வடிவேல் முக்​கிய பங்​காற்​றி​யிருப்​பதும், இவருடன் கம்​போடி​யா, லாவோஸ், வியட்​நாம் ஆகிய நாடு​களில் உள்ள சர்​வ​தேச விமான நிலைய குடி​யுரிமைத் ​துறை அதி​காரி​கள், முகவர்கள், டாக்ஸி ஓட்​டுநர்​கள் ஆகியோர் இணைந்து செயல்​பட்​டிருப்​பதும் தெரிந்​தது.

மேலும், கடந்த 3 ஆண்​டு​களில் நூற்​றுக்​கணக்​கான இந்​தி​யர்​கள் மோசடி மு​காம்​களுக்கு கடத்​தப்​பட்​டிருப்​பதும், இதற்​காக முகவர்கள் கமிஷன் பெற்​றிருப்​பதும்​ தெரிய வந்​த​தாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT