க்ரைம்

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் கட்சி அலுவலகத்தில் தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: கே.கே.நகர் அடுத்த ஜாபர் ​கான்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் சைதை சுகு​மார் (47). வழக்​கறிஞ​ரான இவர் அதி​முக சைதாப்​பேட்டை மேற்கு பகுதி செய​லா​ள​ராக​வும் இருந்​துள்​ளார். இவருக்கு திரு​மண​மாகி 2 பிள்​ளை​கள் உள்​ளனர். அதி​முக-​வின் தீவிர தொண்​ட​னான சுகு​மார், எம்​ஜிஆர் பிறந்த நாள் விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்து கொண்​டிருந்​தார்.

நேற்று முன்​தினம் இரவு, கட்சி நிர்​வாகி​களு​டன் சேர்ந்து ஜாபர்கான் பேட்டையில் பேனர்​களை வைத்​து ​விட்​டு, நிர்​வாகி​கள் வீட்​டுக்​குச் சென்ற நிலை​யில், மீண்​டும் தனது கட்சி அலு​வல​கத்​துக்கு அதி​காலை 3 மணி​யள​வில் வந்​துள்​ளார்.

பின்​னர் அலு​வல​கத்​தில் இருந்த மின்​விசிறி​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். நேற்று அதி​காலை கட்சி அலு​வல​கத்​துக்கு வந்த கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் சுகு​மார் தற்​கொலை செய்து கொண்​டிருப்​ப​தைக் கண்டு உடனடி​யாக போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

தகவல் அறிந்து குமரன் நகர் போலீ​ஸார் நிகழ்​விடம் விரைந்து உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கே.கே.நகர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர். முதல்​கட்ட விசா​ரணையில் அவருக்கு கடன் நெருக்​கடி இருந்​திருப்​பது தெரிந்​தது. இருப்​பினும் அவரது தற்​கொலைக்கு காரணம் கடன் தொல்​லை​யா, கட்சி பிரச்​சினை​யா, வேறு ஏதேனும் காரணமா என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT