அஞ்சு கிருஷ்ணா, ஸ்ரீராம்

 
க்ரைம்

சென்னை | போதைப் பொருள் வழக்கில் நடிகை, கிரிக்கெட் வீரர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் வழக்​கில் நடிகை​, கிரிக்​கெட் வீரர் உள்ளிட்டோர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை வளசர​வாக்​கத்​தில் கடந்த 4-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறிவு போலீ​ஸார் மற்​றும் வளசர​வாக்​கம் போலீ​ஸார் ஒருங்​கிணைந்து கண்​காணித்​தனர்.

அப்​போது அங்கு காரில் வந்த மாங்​காடு, கோவூரைச் சேர்ந்த வெங்​க டேஷ்கு​மார் (31), அதேபகுதி கார்த்​திக் ராஜா (31), காட்​டுப்​பாக்​கம் யஷ்வந்த் (25), நெசப்​பாக்​கம் விக்​னேஷ்வரன் (35) ஆகிய 4 பேரை பிடித்து அவர்​களிட​மிருந்து மெத்​தம்​பெட்​டமைனை பறி​முதல் செய்​தனர்.

          

அவர்​கள் கொடுத்த தகவலின்​பேரில் போதைப்​பொருள் வைத்​திருந்த மேற்கு மாம்​பலம் ஸ்ரீராம் (33), கேரளா பாலக்​காடு அல்​விபின்ஷா (27), வடபழனி வின்சி நிவேதா (26), மண்​ணடிதமீம் நிஸ்​வான் (27), அதே பகுதிஅஞ்சு கிருஷ்ணா (30) ஆகிய மேலும் 5 பேர் என மொத்​தம் 9 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

முன்​ன​தாக அவர்​களிட​மிருந்து 6 கிராம் மெத்​தம்​பெட்​டமைன், 6 கிராம் உயர் ரக கஞ்​சா, போதை ஸ்டாம்ப், 10 செல்​போன்​கள், கார், டைரி பறி​முதல் செய்​யப்​பட்​டன. விசா​ரணை​யில் அஞ்சு கிருஷ்ணா நடிகை என்​பதும், வின்சி நிவேதா துணை நடிகை என்​பதும், ஸ்ரீராம் கிரிக்​கெட் வீரர் என்​பதும் தெரிந்​தது.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி​கள் கூறுகை​யில், “கேரளாவைச் சேர்ந்த அல்​விபின்ஷா போதைப் பொருள் மொத்த வியா​பாரி​யாக செயல்​பட்​டுள்​ளார். இவர் பெங்​களூரு​விலிருந்து கடத்தி வந்​துள்​ளார். இவருக்கு நைஜீரி​யா​வைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்​தல் கும்​பலுடன் தொடர்பு உள்​ளது. அந்த நாட்​டைச் சேர்ந்த 30 பேரை ஏற்​கெனவே கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளோம்.

இதே​போல் துணை நடிகை வின்சி நிவே​தா​வும் போதைப் பொருள் வியா​பாரி​யாக இருந்​துள்​ளார். அவர் கண்​ணாடி பவுச், மணிபர்​ஸ், மேக்​கப் செட் உள்​ளிட்​ட​வற்​றில் சிறு பொட்​டலங்​களாக மறைத்து வைத்​திருந்த போதைப் பொருட்​களை பறி​முதல் செய்​தோம்.

இவர் சினிமா துணை இயக்​குநர்​கள், நடன கலைஞர்​கள் உட்பட பல்​வேறு தரப்​பினருக்​கும் கடந்த 8 மாதங்​களாக விற்​பனை செய்​துள்​ளார். மேலும், இந்த கும்​பல் அமெரிக்​கா​விலிருந்து மும்பை வழி​யாக உயர்ரக வலி நிவாரண மாத்​திரைகளை கடத்தி வந்து போதை மாத்​திரை​யாக விற்​பனை செய்​துள்​ளது.

இந்த மாத்​திரையை ஒரு​முறை உட்​கொண்​டாலே அதற்கு அடிமை​யாகி​விடு​வார்​கள். சினி​மா, ஐடி நிறு​வனத்​தினர் மற்​றும் செல்​வந்​தர்​களுக்கு இந்த மாத்​திரைகள் விற்​கப்​பட்​டுள்​ளன. ஒரு மாத்​திரை ரூ.3,500 வரை விலை வைத்து விற்​பனை செய்​துள்​ளனர். இதன் பின்​னணி​யில் உள்​ளவர்​கள் குறித்து தொடர்ந்​து வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வருகிறது'' என்றனர்.

SCROLL FOR NEXT