க்ரைம்

தூத்துக்குடி சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் அரு​கே​யுள்ள பல்​லாக்​குளத்​தைச் சேர்ந்​தவர் குரு​சாமி (40). லாரி ஓட்​டுந​ரான இவர், குளத்​தூர் சுந்​தரலிங்​கம் நகரில் வசித்து வந்​தார். குடும்​பப் பிரச்​சினை காரண​மாக குரு​சாமியை, அவரது மனைவி பிரிந்து சென்​று​விட்​டார்.

இதனால், தனது 2 குழந்​தைகளை கவனித்​துக் கொள்ள ஒரு பெண்ணை நியமித்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று மாலை குரு​சாமி, தனது சகோ​தரர் முனிய​சாமி​யின் மகன்​கள் முகிலரசன் (5), சுமித்​ரன் (3), சகோ​தரி முத்​துலட்​சுமி (48) மற்​றும் வேலைக்கு நியமித்த முருகம்மாள் (39) என 5 பேர் குளத்​தூரில் இருந்து பல்​லாக்​குளத்​துக்கு ஒரே மோட்​டார் சைக்​கிளில் சென்​றனர்.

கிழக்கு கடற்​கரை சாலை​யில் வைப்​பாறு அருகே சென்​ற​போது, எதிர்​பா​ராத​வித​மாக எதிரே வந்த சுற்​றுலா வேனும், மோட்​டார் சைக்​கிளும் மோதிக் கொண்​டன. இந்த விபத்​தில் குரு​சாமி உட்பட 5 பேரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். விபத்து தொடர்​பாக வேன் ஓட்​டுநர் பச்​சைக்​கிளி (55) என்​பவரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

          
SCROLL FOR NEXT