சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
க்ரைம்

சென்னை | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உட்பட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கஞ்சா விற்​பனை​யில் ஈடு​பட்ட கணவன், மனைவி உட்பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டனர். வேப்​பேரி காவல் நிலைய போலீ​ஸார் நேற்றுமுன்​தினம் புரசை​வாக்​கம் நெடுஞ்​சாலை​யிலுள்ள ஒரு நகைக்​கடை அருகே கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

அங்கு சந்​தேகப்​படும்​படி பைக்​கில் நின்​றிருந்த 2 பேரை பிடித்து விசா​ரித்​த​தில், முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​தனர்.

அதனால், அவர்​கள் வைத்​திருந்த பையை சோதனை செய்​த​போது, அதில் கஞ்சா பொட்​டலங்​கள், போதைப் பொருளாக பயன்​படுத்த வைத்​திருந்த உடல்​வலி மாத்​திரைகளை வைத்​திருந்​தது தெரிந்​தது.

இதையடுத்து, போதைப்​பொருட்​கள் வைத்​திருந்த சென்னை மூலக்​கொத்​தளம் ராம​தாஸ் நகரைச் சேர்ந்த ஜோசப் (20), கொருக்​குப்​பேட்டை ராஜீவ்​காந்தி நகரைச் சேர்ந்த மகேந்​திரன் பூபதி மாரி (22) ஆகிய இரு​வரை கைது செய்​தனர்.

இவர்​களுக்கு போதைப்​பொருட்​களை கொடுத்து விற்​பனை செய்ய சொன்ன புரசை​வாக்​கத்​தைச் சேர்ந்த ஷாலினி (26), இவரது கணவர் கவுதம் (27), பெரம்​பூர் ஜானகி​ராமன் நகரைச் சேர்ந்த அப்​பாஸ் மொய்​தீன் (21) ஆகிய 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

வடமாநிலங்​களில் இருந்து கஞ்சா கடத்தி வந்​து சென்​னை​யில் விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அனை​வரை​யும் கைது செய்து போலீ​ஸார் சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT