க்ரைம்

திருச்சி | கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சி சமயபுரம் அருகே பொறி​யியல் கல்​லூரி மாணவர் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் இளைஞர்​கள் 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சமயபுரம் அரு​கே​யுள்ள மகிழம்​பாடி கீழத் தெரு​வைச் சேர்ந்​தவர் ஆனந்​த​ராஜ் மகன் மகேஸ்​வரன்​(19).

சமயபுரத்​தில் உள்ள பொறி​யியல் கல்​லூரி​யில் 2-ம் ஆண்டு படித்து வந்​தார். கடந்த 3 நாட்​களுக்கு முன்பு சுங்​கச்​சாவடி அருகே டீ கடை​யில் நின்று கொண்​டிருந்​த​போது லால்​குடி அரு​கே​யுள்ள பல்​ல​வபுரத்​தைச் சேர்ந்த இளைஞர்​களு​டன் தகராறு ஏற்​பட்​டது.

          

இதில் இருசக்கர வாகன கண்​ணாடி, டூல்​ஸ்​கள் ஆகிய​வற்​றால் தாக்​கப்​பட்ட மகேஸ்​வரன் அந்த இடத்​திலேயே மயங்கி விழுந்​தார். இதையடுத்​து, திருச்சி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பிரி​வில் சேர்க்​கப்​பட்டு அங்கு நேற்றுமுன்தினம் உயி​ரிழந்தார்.

இதையடுத்​து, இந்​தக் கொலை தொடர்​பாக லால்​குடி அரு​கே​யுள்ள பல்​ல​வபுரத்​தைச் சேர்ந்த சந்​தோஷ்(21), மாதவன் (23), வாசு(20), ரோஹன் ஜோயல்​(20) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து அவர்​களது 2 இருசக்கர வாக​னங்​களை​யும் போலீஸார் பறி​முதல் செய்​தனர்​.

SCROLL FOR NEXT