க்ரைம்

திருச்சியில் ஒரு கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் நகை பட்டறை ஊழியர் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: ​திருச்சியில் நகைபட்​டறை​யில் ஒரு கிலோ தங்​கம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வழக்​கில், நகை பட்​டறை ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திருச்சி பெரியசெட்டி தெரு​வில் பழைய தங்க நகைகளை உருக்கி அதை கட்​டி​யாக்கி விற்​பனை செய்​யும் நகை பட்​டறை தொழில் நடத்தி வருபவர் உதய். இவரது வீட்​டின் முதல் தளத்​தில் கடை ஊழியர் நித்​தின் என்​பவர் தங்கி உள்​ளார்.

இரு​வரும் மகா​ராஷ்டிரா மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​கள். இந்​நிலை​யில், நகை பட்​டறைக்கு ஏப்​.25-ம் தேதி வந்த 4 பேர், தங்​கக்​கட்டி வாங்​கு​வது​போல பேசி நித்​தின், உதய் ஆகியோரை தாக்​கி ரூ.1.49 கோடி மதிப்​பிலான ஒரு கிலோ தங்​கக்​கட்​டியை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர்.

இதுதொடர்​பாக, கோட்டை போலீ​ஸார் 2 தனிப்​படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். உதய், நித்​தின் ஆகியோரது செல்​போன்​களை கைப்​பற்​றிய போலீ​ஸார், இரு​வரும் யாரிடம் பேசி​னார்​கள் என ஆய்வு செய்​தனர்.

இதில், கடை ஊழியர் நித்​தினிடம் விசா​ரணை நடத்​தி​ய​போது, அவர் தனக்கு தெரிந்த மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த 3 பேரை வைத்து கொள்ளை சம்​பவத்தை அரங்​கேற்​றியது தெரிய​வந்​தது.

மேலும், சம்​பவம் நடை​பெற்ற அன்றே போலீ​ஸார் மாநிலம் முழு​வதும் சோதனைச் சாவடிகளை எச்​சரித்​தனர். ஓசூர் அருகே கொள்​ளை​யர்​கள் சென்ற காரை போலீ​ஸார் மடக்கி பிடிக்க முயன்​ற​போது, காரில் இருந்த 3 பேர் தப்​பியோடினர். கார் ஓட்​டுநர் அமல்​ஜாதவ் மட்​டும் போலீ​ஸாரிடம் சிக்​கிக் கொண்​டார்.

நித்​தின், அமல்​ஜாவத் ஆகியோர் அளித்த தகவலின்​பேரில், திருட்டு நகைகளை வாங்கி விற்​கும் பியூஸ் ஆனந்த், பிர​வீன் ஆகியோரை​யும் போலீ​ஸார் பிடித்​தனர்.

தொடர்ந்​து, நித்​தின், அமல்​ஜாதவ், பியூஸ்​ஆனந்த், பிர​வீன் ஆகிய 4 பேரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர், அவர்களை திருச்சி 3-வது குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர் செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த கொள்ளை சம்​பவத்​தில் நேரடி​யாக ஈடு​பட்டு தலைமறை​வாக உள்ள 3 பேரை போலீ​ஸார் தேடி வருகின்​றனர்.

SCROLL FOR NEXT