உயிரிழந்த சிறார்கள் மோசிகரன், யோகவர்ஷினி, அனன்யா, தனு.

 
க்ரைம்

திண்டுக்கல் அருகே வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு: விபத்தை பார்த்து மயங்கி விழுந்த பாட்டிக்கு தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: ​திண்​டுக்​கல் அருகே வேன் மோதி​ய​தில் 4 சிறு​வர், சிறுமிகள் உயி​ரிழந்​தனர். இதைப்பார்த்து மயங்கிவிழுந்த பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திண்​டுக்​கல் மாவட்​டம் வடமதுரை அருகே உள்ள கொல்​லப்​பட்டி சமத்​து​வபுரம் பகு​தி​யைச் சேர்ந்த, பழனிச்​சாமி மனைவி அஞ்​சம்​மாள். இவர், கணவாய் மேடு பகு​தி​யில் சாலை​யோரம் ஞாயிறு பிற்​பகல் ஆடு மேய்த்​துக் கொண்​டிருந்​தார். இவரது உறவினரின் குழந்​தைகள் அவருடன் சென்று சாலை​யோர​மாக விளை​யாடிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அந்த வழி​யாக அதிவேக​மாக வந்த பால் வேன் ஒன்று கட்​டுப்​பாட்டை இழந்து சாலை​யோரம் அமர்ந்​திருந்த குழந்​தைகள் மீது மோதி​யது. இதில், நாக​ராஜ் மகள்​கள் யோக வர்​ஷினி (11), அனன்யா (6), ஜெகதீசன் மகள் தனுஸ்ரீ (5), சின்​னதம்பி மகன் மோசிகரன் (6) ஆகியோர் அதே இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். இதை பார்த்த ஆடு மேய்த்​துக் கொண்​டிருந்த அஞ்​சம்​மாள் அதிர்ச்​சி​யில் மயக்​கமடைந்​தார். விபத்தை ஏற்​படுத்​திய வேன் நிற்​காமல் சென்​றது.

பின்​னர், சிறிது தூரத்​தில் நிறுத்​தி​விட்டு ஓட்டுநர் தப்​பியோடி விட்​டார். தகவலறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த வடமதுரை போலீ​ஸார், 4 சிறார்​களின் உடல்​களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக திண்​டுக்​கல் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அதிர்ச்​சி​யில் மயக்​கமடைந்த அஞ்​சம்​மாள் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்த விபத்து குறித்து வட மதுரைபோலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, பால் வேன் ஓட்​டுநர் குருந்​தம்​பட்​டியைச் சேர்ந்த சரவணக்​கு​மாரை போஸீஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT