க்ரைம்

கரூர்: இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

கரூர்: இளைஞர் கொலை வழக்​கில் சகோ​தரர்​கள் 2 பேர் உட்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரத்தை அடுத்த பிச்​சம்​பட்​டியைச் சேர்ந்​தவர்​கள் ராஜா(28), பிர​பாகரன்​(28). இவர்​கள் இரு​வரும் 2021 ஜூலை 4-ம் தேதி இருசக்கர வாக​னத்​தில் சென்​ற​போது, பிச்​சம்​பட்​டி​யில் சாலை​யில் தனி​யார் கட்​டு​மான லாரி இடையூறாக நிறுத்​தப்​பட்​டிருந்​தது.

          

இதையடுத்​து, அந்த லாரி ஓட்​டுநர் செந்​திலிடம் அவர்​கள் இரு​வரும் தகராறில் ஈடு​பட்​டனர். செந்​தி​லுக்கு ஆதர​வாக தனி​யார் கட்​டு​மான நிறுவன மேற்​பார்​வை​யாள​ரான, மணவாசியை சேர்ந்த தர்​மதுரை (29) பேசி​னார். தகராறை கண்ட அப்​பகு​தி​யைச் சேர்ந்த கொத்​த​னார் பிரபு(35) இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்​தி, அனுப்பி​வைத்​தார்.

பின்​னர், பிச்​சம்​பட்டி பகவ​திஅம்​மன் கோயில் முன்பு ஜூலை 5-ம் தேதி சமா​தான பேச்​சு​வார்த்தை நடை​பெற்​ற​போது, தர்​மதுரை உள்​ளிட்ட 10-க்​கும் அதி​க​மானோர் திடீரென கத்​தி, அரி​வாள் உள்​ளிட்ட ஆயுதங்​களால் பிரபுவை வெட்​டி​விட்டு தப்​பி​விட்​டனர். இதில் காயமடைந்த பிரபு, மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து மாயனூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, தர்​மதுரை, இவரது சகோ​தரர் ராஜதுரை(31) மற்​றும் அபிஷேக்​(27) ஆகியோர் உட்பட 14 பேரை கைது செய்​தனர். கரூர் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் இவ்​வழக்கு நடை​பெற்​றது.

இதில், குற்​றம் சுமத்​தப்​பட்ட ராஜதுரை, தர்​மதுரை, அபிஷேக் ஆகியோ​ருக்கு ஆயுள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.1 லட்​சம் அபராத​மும் விதித்து நீதிபதி கே.ஹெச்​.இளவழகன் நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டார்​. மற்ற 11 பேரும் விடுவிக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT